SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ் – கடன் வட்டி விகிதம் 70 bps அதிகரிப்பு! மார்ச் 15 முதல் அமல்!

0
SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ் - கடன் வட்டி விகிதம் 70 bps அதிகரிப்பு! மார்ச் 15 முதல் அமல்!
SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ் - கடன் வட்டி விகிதம் 70 bps அதிகரிப்பு! மார்ச் 15 முதல் அமல்!
SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ் – கடன் வட்டி விகிதம் 70 bps அதிகரிப்பு! மார்ச் 15 முதல் அமல்!

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான SBI மார்ச் 15 முதல் கடன் வட்டி விகிதத்தை 70 பிபிஎஸ் அதிகரித்து 14.85% ஆக உயர்த்த இருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் இது குறித்த விவரங்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்

வட்டி விகிதம்:

பொதுத்துறை கடன் வழங்கும் வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) அதன் அடிப்படை விகிதத்தை 70 பிபிஎஸ் உயர்த்தி 10.10 சதவீதமாக உயர்த்த இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த வட்டி விகித உயர்வு மார்ச் 15 முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ரெப்போ விகிதத்தை அல்லது வணிக வங்கிகளுக்கு குறுகிய கால நிதியளிப்பு விகிதத்தை 6.25 சதவீதத்தில் இருந்து 6.50 சதவீதமாக உயர்த்திய நிலையில் தற்போது இந்த அறிவிப்பை SBI வெளியிட்டுள்ளது.

அச்சத்தை அதிகரிக்கும் புதிய வகை வைரஸ்கள்..தமிழகத்தில் எந்த வகை?- சுகாதாரத்துறை விளக்கம்!

எஸ்பிஐ பிபிஎல்ஆர் மற்றும் அதன் அடிப்படை விகிதத்தை அதிகரித்தாலும், வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்கும் எம்சிஎல்ஆர் எந்த மாற்றமும் செய்யவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக SBI கடந்த பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி எம்சிஎல்ஆரை 10 பிபிஎஸ் உயர்த்தியது. அதனால் தற்போது அதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. தொடர்ச்சியாக பல முக்கிய வங்கிகள் வட்டி விகிதத்தை உயர்த்தி வருவதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.

Follow our Instagram for more Latest Updates

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!