ரூ.50,000 மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு..!
ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (SCI) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Secretarial Officer பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
- ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (SCI) நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், Secretarial Officer பணிக்கு என்று ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
- Institute of Company Secretaries of India (ICSI) வில் இணை / உறுப்பினர் தகுதி பெற்ற நிறுவனச் செயலாளர் மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மேலும் இப்பணிக்கு இந்திய குடிமக்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று அறிவித்துள்ளது.
- 01.05.2022 அன்றைய தினத்தின் படி, விண்ணப்பதாரர்களுக்கு 32 வயதானது அதிகபட்ச வயதாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால், விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 32 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
- இப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்கள் மாதம் ரூ.50,000/- ஊதியம் பெறுவார்கள். மேலும் இப்பணிக்கு வழங்கப்படும் கூடுதல் தொகை குறித்து அறிவிப்பில் காணலாம்.
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் அனுபவம் பொறுத்து Shortlist செய்யப்பட்டு, அதன் பின் நேரடியாக நேர்காணல் வாயிலாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 30.05.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.