தமிழகத்தில் இன்று நிழலில்லா நாள் – ‘நமது நண்பன்’ என்று சொல்லப்படும் நிழலும் இன்றைக்கு தெரியாது!
இன்றைக்கு ‘மனிதர்களின் நண்பன்’ என்று அழைக்கப்படும் நிழல் நமது கண்ணுக்கு தெரியாது என்று தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தெரிவித்து உள்ளது.
வருடத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே இந்த அரிய நிகழ்வு நடக்கிறது. இந்த வருடத்திற்கான முதல் நிகழ்வு கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது. இந்த ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி நிகழ்வான நிழல் இல்லாத தினம் ஆகஸ்ட் 18-ம் தேதியான இன்றைக்கு நடக்கிறது. இந்த நிகழ்வை கொரோனா பரவல் காரணமாக வீட்டில் இருந்தபடியே தனிமனித இடைவெளியோடு மக்கள் தம் உறவினர் மற்றும் நண்பர்களோடு நண்பகலில் கண்டுகளிக்கலாம் என அறிவியலாளாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அது என்ன நிழலில்லா நாள் ?
ஒவ்வொரு ஆண்டும் இரு நாட்கள் மட்டும் சூரியன் உச்ச பகுதிக்கு வரும் நண்பகல் வேளையில் நம்மை பிரதிபலிக்கும் நிழல் தரையில் விழுவதில்லை. இதை தான் “நிழலில்லா தினம்” அல்லது “பூஜ்ஜிய நிழல் நாள்” என்கிறோம். அப்படியானால் மற்ற நாட்களில் சூரியன் வானில் உச்ச நிலைக்கு வராதா? என்றால் நிச்சயம் வரும். ஆனால் அன்றைக்கு ஏன்? நிழல் தெரிகிறது என்று நீங்கள் நிச்சயம் கேட்கலாம். இந்த இரண்டு நாட்கள் மட்டுமே சூரியன் மிகச் சரியாக நம் தலைக்கு மேலே வரும்.
தமிழகத்தில் காலியாக உள்ள வட்டாரக்கல்வி அலுவலர் பணியிடங்கள் – தேர்வர்கள் குழப்பம்!
இதற்கு காரணம் சூரியன் கடக ரேகைக்கும், மகர ரேகைக்கும் இடைப்பட்ட பகுதியில் வரும். அதற்கு பிறகு துருவப்பகுதி வரை சூரியன் தலைக்கு மேலே வரவே வராது. இதனால் தான் இந்த இரண்டு நாட்கள் மட்டும் நம் நிழல் எந்த திசையிலும் சாயாமல் நமது காலுக்கு கீழே விழுகிறது.
TN Job “FB Group” Join Now
இந்த நிகழ்வானது இன்றைக்கு ஓசூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வாணியம்பாடி, கடலூர், ஆம்பூர், ஆரணி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மாமல்லபுரம், கேளம்பாக்கம், வேலூர், சென்னை உள்ளிட்ட 17 இடங்களில் கண்டுகளிக்கலாம் என சொல்லப்பட்டுள்ளது. இதன் செயல் விளக்கம் குறித்த முறையான விவரங்கள் நாளை பிர்லா கோளரங்கத்தில் விரிவாக விளக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.