ஜூன் 30 வரை ஊரடங்கு, 4 மணிக்கு மேல் மக்கள் நடமாட்டத்திற்கு தடை – மாநில அரசு அறிவிப்பு!
நாகலாந்து மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு 5 சதவிகிதத்திற்கும் அதிகமாக காணப்பட்டு வருவதால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை ஜூன் 30 வரை நீட்டித்து மக்கள் 4 மணிக்கு மேல் வெளியே வருவதற்கு தடை விதித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
ஊரடங்கு கட்டுப்பாடுகள்:
நாகலாந்து மாநிலத்தில் கொரோனா நோய்த்தொற்று அதிக வீரியத்தில் பரவி வந்ததால் மக்களை பாதுகாக்கும் பொருட்டு ஏற்கனவே வருகிற ஜூன் மாதம் 19ம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டது. இதை அடுத்து இன்னும் 2 தினங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவுக்கு வரவுள்ளதால் மாநிலத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டிப்பதா அல்லது சில தளர்வுகள் அளிப்பதா என்று தலைமை செயலர் அவர்கள் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டனர்.
Facebook பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஜூன் 22 முதல் ஆடியோ கிளிப்புகள் அம்சம்!
இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின் நாகலாந்து தலைமை செயலர் ஜே.ஆலம் அவர்கள் முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி நாகலாந்து மாநிலத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் வருகிற ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். நாகலாந்து மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு விகிதம் 5 சதவிகிதத்துக்கும் மேல் காணப்பட்டு வருவதால் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
அதன்படி ஜூன் 30ம் தேதி வரை மக்கள் அனைவரும் தினசரி மாலை 4 மணி முதல் காலை 5 மணி வரை வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே இந்நேரங்களில் வெளியே செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மாவட்டங்கள் தோறும் கொரோனா பாதிப்புகள் கட்டுக்குள் கொண்டு வர உள்ளூர் நிலைமைகளின் அடிப்படையில் மாவட்டங்களில் கூடுதல் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது.