கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் – உள்துறை செயலாளர் கடிதம்!
இந்தியாவில் அனைத்து மாநில அரசுகளும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை செயலாளர் கடிதம் அனுப்பியுள்ளார்.
கொரோனா முன்னெச்சரிக்கை:
கடந்த ஆண்டு முதல் நாட்டில் கொரோனா தொற்றின் அச்சம் நீடித்து வருகிறது. இதனை தடுக்க கடந்த ஆண்டு முதன் முதலில் மத்திய அரசு நாடு தழுவிய முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அறிவித்தது. பொது ஊரடங்கினால் மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டது. முதல் அலையின் தீவிரம் கடந்த டிசம்பர் மாத வாக்கில் குறைந்தது. மெல்ல இயல்பு நிலை திரும்புகையில் மீண்டும் இரண்டு மாத இடைவெளியில், கொரோனா தொற்றின் 2ம் அலை மீண்டும் அதிகரிக்க தொடங்கியது.
“விவசாயிகளுடன் ஒரு நாள்” அமலுக்கு வரும் புதிய திட்டம் – அமைச்சர் அறிவிப்பு!
ஆனால் 2ம் அலையின் தாக்கத்தின் போது மத்திய அரசு நாடு தழுவிய ஊரடங்கை அறிவிக்கவில்லை. மக்களின் வாழ்வாதாரம் மற்றும் நாட்டின் பொருளாதார சூழலை கருத்தில் கொண்டு மாநில அரசுகள் தங்கள் மாநிலத்தின் தொற்று பரவல் நிலையை கருத்தில் கொண்டு கட்டுப்பாடுகளை விதிக்க உத்தரவிட்டது. இதனால் மாநில அரசுகளும் தங்கள் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு சூழலை பொறுத்து ஊரடங்கு கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளை அளித்து வருகின்றது. இந்நிலையில், நாட்டின் அனைத்து மாநில மற்றும் யூனியன் அரசின் தலைமை செயலாளர்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் செயலாளர் அஜய் பல்லா அவர்கள் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
TN Job “FB Group” Join Now
அந்த கடிதத்தில், நாட்டின் ஒரு சில மாநிலத்தின் ஒரு சில மாவட்டங்களில் கொரோனா நோய் பாதிப்பு அதிகமாக உள்ளது கவலை அளிக்கும் விதமாக உள்ளது. பண்டிகை நாட்களில் மக்கள் கூட்டம் அதிகமாக கூடுவதை தடுக்க வேண்டும். இதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதற்காக மாநில அரசுகள் தேவையான கட்டுப்பாடுகளை விதிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மீண்டும் கொரோனா பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது முக்கியம் என்று தெரிவித்துள்ளார்.