“விவசாயிகளுடன் ஒரு நாள்” அமலுக்கு வரும் புதிய திட்டம் – அமைச்சர் அறிவிப்பு!
தமிழக விவசாயிகளின் குறைகளை கேட்க புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ‘விவசாயிகளுடன் ஒரு நாள்’ என்ற புதிய திட்டத்தின் மூலம் குறைகள் கேட்கப்பட்டு தீர்வு காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளுடன் ஒரு நாள்:
தமிழகத்தில் 2021-22 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் ஆகஸ்ட் 13ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. சட்டப்பேரவை வரலாற்றில் முதல் முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட்டை நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் தாக்கல் செய்து உரையாற்றினார். மறுநாள் வேளாண் துறைக்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் இன்று கால்நடை, வேளாண் மற்றும் மீன்வளம் ஆகிய துறைகளின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
ரேஷன் கார்டு பிரிக்கும் பணிகள் தீவிரம் – மாவட்ட அதிகாரிகள் நடவடிக்கை!
அதில் விவசாயிகளின் நலன் குறித்து வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் பேசினார். விவசாயிகளுக்கு பல்வேறு பிரச்சனைகள் இருப்பதாகவும் அவை ஏதும் அதிகாரிகளின் காதுகளுக்கு வரவில்லை என்பதால் மாதம் ஒரு நாள் அனைத்து எம்எல்ஏ.,க்களும் கிராமங்களுக்கு சென்று விவசாயிகளின் கருத்துகளை கேட்க வேண்டும் என கூறப்பட்டது. மேலும் அவர்களின் குறைகளை ஆராய்ந்து அதனை தீர விசாரித்து தீர்வு காண வேண்டும் எனவும் கூறப்பட்டது.
TN Job “FB Group” Join Now
இதனை தொடர்ந்து ‘விவசாயிகளுடன் ஒரு நாள்’ என்ற திட்டம் ஒன்றை முதல்வரின் அனுமதியுடன் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் அறிவித்தார். இதனை தொடர்ந்து ஓராண்டில் 2,500 கிராமங்களுக்கு செல்ல வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார். காளான் உற்பத்தி கூடம் அமைக்க 100 மகளிருக்கு ஒரு கோடி ரூபாய் மானியமாக வழங்கப்படும் போன்ற 25 புதிய அறிவிப்புகளை அமைச்சர் பன்னீர்செல்வம் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.