மாநிலங்களில் தீவிர நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் – மத்திய அரசு அறிவுறுத்தல்!
இனி வரும் காலங்களில் அடுத்தடுத்து பண்டிகைகள் வர இருப்பதால் மாநில அரசுகள் தீவிர நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
நோய் கட்டுப்பாடு:
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2ம் அலை பரவல் கடந்த மார்ச் மாதம் முதல் உச்சத்தில் இருந்தது. இதனால் மத்திய அரசு மாநிலங்களில் உள்ள நிலவரத்தை பொறுத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதிக்க உத்தரவிட்டது. இதனால் மாநில அரசுகள் ஆரம்பத்தில் தளர்வுகளற்ற ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்தது. தீவிர கட்டுப்பாடுகளின் விளைவினால் ஒரு சில மாநிலங்களை தவிர மற்ற மாநிலங்களில் கொரோனா நோய் தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. பாதிப்பு தொடர்ந்து அதிகம் உள்ள மாநிலங்களுக்கு மத்திய அரசு நேரடியாக பல உதவிகளையும் செய்து வந்தது.
IPL 2021: KKR vs DC – 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா அசத்தல் வெற்றி!!
இடையில், கடந்த மாதம் ஒரு சில மாநிலங்களில் பண்டிகை காலங்களை ஒட்டி ஊரடங்கு கட்டுப்பாடுகளில் மாநில அரசுகள் பல தளர்வுகளை அளித்து வந்தது. வணிக வளாகங்கள் மற்றும் சந்தைகளில் மக்கள் அரசின் தளர்வுகளை முறையாக கடைபிடிக்காத காரணத்தால் மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது. இதனால் தமிழகம் போன்ற சில மாநிலங்களில் பண்டிகை காலங்களில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டது. இந்நிலையில், இனி அடுத்தடுத்து பல முக்கிய பண்டிகைகள் நாடு முழுவதும் வர இருக்கிறது.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ புது ஐஸ்வர்யா ரியல் அம்மாவுடன் வெளியிட்ட புகைப்படம் – ரசிகர்கள் ஷாக்!
இதனால் மத்திய உள்துறை செயலர் அஜய் பல்லா மாநில அரசுகளுக்கு, கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்த தேவைப்பட்டால் 144 தடை உத்தரவை பயன்படுத்த வேண்டும். மேலும், பண்டிகை காலம் நெருங்குவதால் கொரோனா தடுப்பு நடவடிக்கையை கண்காணித்து செயல்படுத்த வேண்டும். திருவிழாக்கள், கூட்டங்கள் போன்றவற்றால் கொரோனா அதிகரிக்கலாம் என்பதால் கட்டுப்பாடுகள் அவசியம். மக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும். தடுப்பூசி போடும் பணியை அதிகரிக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.