‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ புது ஐஸ்வர்யா ரியல் அம்மாவுடன் வெளியிட்ட புகைப்படம் – ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்கும் சாய் காயத்ரி தனது அம்மாவுடன் சமீபத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
நடிகை சாய் காயத்ரி:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற சீரியலிகளில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். ஒரு குடும்ப கதைக்களத்தை மையமாக கொண்டு எபிசோட் தொடர்கிறது. அந்த சீரியலில் ஒவ்வொரு கேரக்டரும் நல்ல ரீச் ஆகியுள்ளது. தற்போது கண்ணன் வீட்டுக்கு தெரியாமல் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டாதால் நாடகம் விறு விறுப்பாக செல்கிறது. இருவரும் தனியாக வீடு பிடித்து தங்கி உள்ளனர்.
தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி – வெளியான குளறுபடி!
மகன் தனக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டதை தாங்கி கொள்ள முடியாமல் அம்மா லெட்சுமி அதை நினைத்து உடல் நலம் சரியில்லாமல் இறந்து விட்டார். இந்த நேரத்தில் கண்ணனுக்கு ஜோடியாக இருந்த ஐஸ்வர்யா கேரக்டரில் நடித்த விஜே தீபிகா மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக சாய் காயத்திரி நடித்து வருகிறார். இவர் ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜா சீரியலில் நடித்தார்.
ஜீ தமிழ் ‘செம்பருத்தி’ சீரியல் ஷபானா சாதித்த கதை – ரசிகர்கள் நெகிழ்ச்சி!
மதுரையை சேர்ந்த சாய் காயத்ரி சென்னைக்கு வந்து விஸ்காம் படித்து கொண்டே மாடலிங் செய்து வந்தார். பல முக்கிய சேனல்களில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றினார். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணனுக்கு ஜோடியாக இவர் நடிப்பது குறித்து சமூக வலைதளங்களில் பல நெகட்டிவ் கமெண்ட்கள் வந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையிலும் சீரியலில் தொடர்ந்து நடித்து வருகிறார். தற்போது நடிகை சாய் காயத்ரி தனது அம்மாவுடன் சமீபத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.