தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,630 பேருக்கு கொரோனா உறுதி – சுகாதாரத்துறை அறிக்கை!
தமிழகத்தில் கொரோனா தொற்றின் கடந்த 24 மணி நேர நிலவரப்படி உள்ள அறிக்கையினை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, இன்று 27 மாவட்டங்களில் புதிய இறப்புகள் ஏதும் பதிவாகவில்லை.
கொரோனா பாதிப்பு:
கொரோனா தொற்றின் 2ம் அலை தமிழகத்தில் கடந்த ஜூன் மாதம் முதல் படிப்படியாக குறையத் தொடங்கியது. இதனால் தமிழக அரசு மாநிலம் முழுவதும் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை தளர்த்தியது. இதனால் தமிழகத்தில் மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது. இருப்பினும், தொற்று பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் மேலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. தமிழக சுகாதாரத்துறை தமிழகத்தின் தினசரி கொரோனா பாதிப்பு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
10 ஆண்டுகளுக்கான செம்மொழி விருதுகள் – தமிழக அரசு அறிவிப்பு!
அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் புதிதாக 1,630 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தின் மொத பாதிப்பு 26,60,553 ஆக அதிகரித்துள்ளது. இன்று தமிழகத்தில் 17 பேர் தொற்று பாதிப்பினால் உயிரிழந்துள்ளனர். புதிதாக 27 மாவட்டங்களில் பலி எண்ணிக்கை பதிவாகவில்லை. இருப்பினும், தமிழகம் முழுவதும் இதுவரை 35,526 பேர் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மேலும் 1,643 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் மொத்தம் 26,07,796 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
IPL 2021: MI vs PBKS: மும்பை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி!
கடந்த 24 மணி நேர நிலவரப்படி, தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் 17,231 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மட்டும் 1,50,725 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் இதுவரை 4,66,88,837 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தின் தலைநகரான சென்னையில் இன்று ஒரே நாளில் 184 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இதுவரையில் மொத்தம் 5,49,460 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.