தமிழக கல்லுரிகளில் செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு!!
தமிழகத்தில் செயல்படும் பல்கலைக்கழகங்களில் இருந்து அங்கு நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக தற்போது புதிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. தேர்வர்கள் அப்பல்கலைக்கழகங்களின் விவரங்கள் மற்றும் தேர்வு குறித்த தகவல்களை மூலமாக அறிந்து கொள்ளலாம்.
கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகள் :
தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் பல்வேறு பாடப்பிரிவுகளில் பயிலும் இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கு இந்த மே செமஸ்டர் தேர்வுகள் நடைபெற இருப்பதாக முன்னதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அவற்றிற்கான அறிவிப்புகளும் முன்னதாகவே வெளியானதால் மாணவர்களும் தேர்விற்கு தயாராகிக் கொண்டு இருந்தனர்.
தேர்வுகள் ஒத்திவைப்பு 2021 :
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலையின் காரணமாக 10.05.2021 அன்று முதல் 24.05.2021 வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மாணவர்களுக்கு இத்தேர்வுகளை ஒத்திவைப்பதாக தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம் ஆகிய மூன்று பல்கலைக்கழகமும் புதிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது.
TN Job “FB Group” Join Now
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் 13.05.2021 முதல் 31.05.2021 வரையிலும், அழகப்பா பல்கலைக்கழகத்தில் 10.05.2021 முதல் 25.05.2021 வரையிலும், பாரதியார் பல்கலைக்கழகத்தில் 10.05.2021 முதல் 24.05.2021 வரையிலும் தேர்வுகள் நடத்தப்பட்ட திட்டமிடப்பட்டு இருந்த நிலையில் மறுதேர்வு தேதி குறிப்பிடப்படாமல் மறு அறிவிப்பு வரும் வரை ஒத்திவைக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.