விவாகரத்து வதந்திக்கு மத்தியில் “செம்பருத்தி” ஷபானாவின் இன்ஸ்டா பதிவு – ரசிகர்கள் குழப்பம்!
ஜீ தமிழ் செம்பருத்தி சீரியலில் நடித்து வரும் ஷபானா, விஜய் டிவி பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வரும் ஆர்யன் என்பவரை திருமணம் செய்த நிலையில் தனது விவாகரத்து குறித்து வெளிவரும் வதந்திகள் குறித்து இன்ஸ்டா பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
நடிகை ஷபானா:
தமிழ் சின்னத்திரையில் முதன் முறையாக சீரியலில் கதாநாயகியாக அறிமுகமாகி தற்போது மக்கள் மனதில் சிறந்த நடிகையாக இடம் பிடித்தவர் நடிகை ஷபானா. அவர் விஜய் டிவி பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வரும் ஆர்யன் என்பவரை காதலித்து வந்தார். இருவரும் பல இடங்களுக்கு ஒன்றாக சென்ற புகைப்படங்கள் இணையத்தில் பரவியது. இவர்கள் காதலுக்கு இரு வீட்டார் தரப்பில் இருந்து எதிர்ப்பு தெரிவித்த நிலையில், நண்பர்கள் உதவி உடன் கடந்த மாதம் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்திற்கு பின் இந்த காதல் ஜோடி பல புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு வருகின்றனர். மேலும் தேனிலவிற்கு பாண்டிசேரி சென்று அங்கேயும் பல புகைப்படங்களை வெளியிட்டனர். இந்நிலையில் சமீபத்தில் ஷபானா தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் சிறு புன்னகை, கொஞ்சம் சந்தோஷம், ஒரு சின்ன நிலவு, கனவுகளின் ஓலைகளுடன், ஒரு வீட்டை கட்டுவோம் என்று பதிவிட்டுள்ளார்.
இதை பார்த்த ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கின்றனர். பலர் ஆர்யன் வீட்டில் இவர்கள் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் அதனால் இந்த காதல் ஜோடி இடையே சண்டை நடைபெறுவதாகவும் விரைவில் பிரிய இருப்பதாகவும் வதந்திகள் பரவி வருகிறது. ஆனால் நிஜத்தில் ஷபானா ஆர்யன் சந்தோசமாக இருக்கின்றனர். ஆனால் ஷபானா ஏன் இந்த பதிவை வெளியிட்டு இருக்கிறார் என குழப்பம் ஏற்பட்டுள்ளது.