விஜய் டிவி ‘செந்தூரப்பூவே’ சீரியல் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – மீண்டும் ஷூட்டிங்! ரசிகர்கள் உற்சாகம்!

0
விஜய் டிவி 'செந்தூரப்பூவே' சீரியல் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் - மீண்டும் ஷூட்டிங்! ரசிகர்கள் உற்சாகம்!
விஜய் டிவி 'செந்தூரப்பூவே' சீரியல் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் - மீண்டும் ஷூட்டிங்! ரசிகர்கள் உற்சாகம்!
விஜய் டிவி ‘செந்தூரப்பூவே’ சீரியல் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – மீண்டும் ஷூட்டிங்! ரசிகர்கள் உற்சாகம்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த செந்தூரப்பூவே சீரியல் சில வாரங்களுக்கு முன்னதாக ஒரு சில காரணங்களால் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. தற்போது மீண்டும் செந்தோரப்பூவே படப்பிடிப்புகள் தொங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செந்தூரப்பூவே:

விஜய் டிவியின் சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு என்று ரசிகர்கள் கூட்டம் தனியாக உள்ளது. மிகவும் போரடிக்காமல் சீரியல்கள் விறுவிறுப்பாகவும், நிகழ்ச்சிகள் அனைத்தும் மனதை லேசாகும் விதத்தில் முழுக்க கலகலப்பாகவும் செல்வது தான் இதற்கு முக்கிய காரணம். ஒரு சில வருடங்களுக்கு முன்பு வரை விஜய் டிவியில் ஒரு சில சீரியல்கள் மட்டுமே ஒளிபரப்பாகி வந்தது. ஆனால் தற்போது முற்பகல் முதல் இரவு வரை தொடர்ந்து பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. ஒவ்வொரு கதையும் வெவ்வேறு கோணத்தில் மக்களை ரசிக்க வைக்கும் வகையில் தான் உள்ளது.

கண்ணனை அடித்த கடை பையனுடன் சேர்ந்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கதிர் – ரசிகர்கள் ஷாக்!

இந்நிலையில் வெள்ளித்திரை நடிகர் ரஞ்சித் முதன் முறையாக சின்னத்திரையில் நாயகனாக நடிக்கும் செந்தூரப்பூவே சீரியல் கடந்த வருடம் முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்தது. தனது மனைவி இறந்த பின்னால் இரண்டு பெண் குழந்தைகளுக்கு அப்பாவாக கவலையோடு வாழ்ந்து வரும் ஒருவர் அதே குழந்தைகளுக்காக மற்றொரு பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார். அப்படி இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ளும் பெண் காதலனை திருமணம் செய்து கர்ப்பமாக இருப்பதை அறிந்து ரஞ்சித் கதாபாத்திரம் அதை மிகவும் குடும்பத்திற்கு தெரியாமல் கையாளும் வகையில் கதை சென்றது.

விஜய் டிவி ‘பிக்பாஸ்’ சீசன் 5 அமீர் பற்றி பாவனியிடம் பேசும் குடும்பத்தார் – ப்ரோமோ ரிலீஸ்!

நல்ல வரவேற்பை பெற்ற இந்த தொடர் சில வாரங்களுக்கு முன்னதாக திடீரென்று தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் இந்த சீரியலின் ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி 80வது நாளை கடந்து இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னர் அந்த நேரத்தில் ஒளிபரப்பாக சீரியல்களில் நேரம் மாற்றப்பட வாய்ப்புகள் உள்ளது. தற்போது செந்தூரப்பூவே சீரியல் மீண்டும் தொடங்கப்பட்டதற்கான படப்பிடிப்பு தொடங்கி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் செந்தூரப்பூவே ரசிகர்கள் மிகவும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!