பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி – மாநில அரசின் புதிய முயற்சி! வரவேற்கும் மக்கள்!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் மிஷன் சக்தி என்ற திட்டம் அண்மையில் கொண்டு வரப்பட்டுள்ளது. தற்போது இந்த திட்டத்தின் கீழ் பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தற்காப்பு பயிற்சி:
உத்திரபிரதேச மாநிலத்தில் கடந்த அக்டோபர் மாதம் மிஷன் சக்தி எனும் திட்டத்தை அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிமுகப்படுத்தினார். இதன் மூலம் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் கண்டறியப்பட்டு தீர்வு காணப்பட்டது. மேலும் இதன் கீழ் பெண்களுக்கு இழைப்படும் குற்றங்கள், பாலியல் புகார்கள் போன்ற வழக்குகளில் கைதாகும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாநில முதல்வர் உத்தரவிட்டார்
Follow our Instagram for more Latest Updates
அத்துடன் இந்த மிஷன் சக்தி திட்டத்திற்காக புதிய இணையதளமும் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பெண்கள் பாலியல் தொடர்பான புகார்களை பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த திட்டம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது. தற்போது இந்த திட்டத்தின் கீழ் பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு – ஹால் டிக்கெட் பதிவிறக்க முறைகள் உள்ளே!
Exams Daily Mobile App Download
இந்த மாதம் முதல் தற்காப்பு பயிற்சி தொடங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளர். மேலும் 2023 பிப்ரவரி மாதம் வரை இந்த பயிற்சி நடைபெறும். இந்த பயிற்சியின் முதல் வாரத்தில் குழந்தைகளுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகள், சட்டங்கள், உதவி எண்கள் போன்றவைகளை கற்றுத் தர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்தகைய தற்காப்பு பயிற்சி அந்தந்த பள்ளியின் உடற்கல்வி மற்றும் விளையாட்டு ஆசிரியர் வாயிலாக வழங்கப்படும்.