தேசிய பாதுகாப்பு படையில் (NDA) பெண்களும் சேர்ப்பு – 2022 மே நுழைவுத்தேர்வு!
தேசிய பாதுகாப்பு அகாடமி (NDA)யில் பெண் கேடட்டுகளுக்கான இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை நடத்தப்பட இருக்கும் பட்சத்தில், அதற்கான நுழைவுத்தேர்வுகள் 2022 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நுழைவுத் தேர்வு
ஒரு காவல்துறை அதிகாரி துவங்கி ராணுவத்தின் மிகப்பெரிய பதவிகளையும் இன்றைய காலத்து பெண்கள் சிறப்பாக செய்து வருகின்றனர். அந்த வகையில் யூனிபார்ம் சர்வீசஸ்களில் பெண்களுக்கான சிறந்த எதிர்காலம் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாட்டின் ஆயுதப்படையில் பெண்களுக்கான இடம் மறுக்கப்பட்டுள்ளது மத்திய அரசுக்கு எதிராக பூதாகரமான பிரச்சனையாக வெடித்துள்ளது. இந்த சிக்கல்களுக்கு தீர்வு கண்ட உச்சநீதி மன்றம் தேசிய பாதுகாப்பு அகாடமி (NDA) யில் பெண்கள் பங்கேற்கலாம் என்று உச்ச நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது.
தமிழகத்தில் ரூ.50,000க்கு அதிகமாக கொண்டு சென்றால் பறிமுதல் – உள்ளாட்சி தேர்தல் எதிரொலி!
இதை தொடர்ந்து NDA வில் பெண் கேடட்கள் சேர்க்கை துவங்க இருப்பதாக தற்போது அறிவிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த புதிய சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வுகள் அடுத்த ஆண்டு மே மாதம் நடத்தப்பட இருக்கிறது. அதாவது NDAல் பெண் கேடட்களுக்கான ஆட்சேர்ப்பு கொள்கை பாரபட்சமாக இருப்பதாக கருதப்பட்ட நிலையில், பொருத்தமான மருத்துவ மற்றும் உடல் தகுதியுடைய ஆண் மற்றும் பெண்களுக்கு இடையே தேவையான உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய அரசாங்கம், உச்சநீதி மன்றத்தில் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் மருத்துவ தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் மட்டுமே தேர்வு அளவுகோல்களை சந்திக்க உள்ளனர். இதில் ஆண் மற்றும் பெண் கேடட்டுகளுக்கான தனி தரநிலைகள் தற்போது உருவாக்கத்தில் உள்ளது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் மகளிர் மருத்துவ வல்லுநர்கள், விளையாட்டு மருத்துவ நிபுணர்கள் மற்றும் ஆலோசகர்கள், நர்சிங் ஊழியர்கள் மற்றும் பெண் உதவியாளர்களை சேர்க்க வேண்டும் எனவும் மத்திய அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சி – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தகவல்!
மேற்கூறியவற்றைப் பூர்த்தி செய்வதற்காக, NDA யில் உள்ள பெண் கேடட்டுகளுக்கான விரிவான பாடத்திட்டத்தை விரைவாக வகுக்க நிபுணர்களை உள்ளடக்கிய ஒரு ஆய்வுக் குழு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பெண்கள் இப்போது NDA நுழைவுத் தேர்வுகளை எழுதலாம். மேலும் NDA வில் இருந்து தகுதி பெற்ற பெண் வேட்பாளர்களை கண்டிப்பாக விலக்குவது அரசியலமைப்புக்கு முரணானது என்று வாதிட்ட மனுவுக்கு நாட்டின் ஆயுதப்படையில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமான சேவை வாய்ப்புகள் வரும்போது அதை மறுக்க கூடாது என உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.