இரு கட்சிகள் இடையே மோதல் – வன்முறையை தடுக்க 144 தடை உத்தரவு பிறபிப்பு!!

0
இரு கட்சிகள் இடையே மோதல் - வன்முறையை தடுக்க 144 தடை உத்தரவு பிறபிப்பு!!
இரு கட்சிகள் இடையே மோதல் - வன்முறையை தடுக்க 144 தடை உத்தரவு பிறபிப்பு!!
இரு கட்சிகள் இடையே மோதல் – வன்முறையை தடுக்க 144 தடை உத்தரவு பிறபிப்பு!!

ஆந்திர மாநிலத்தில் இரு கட்சிகள் இடையே மோதல் நிலவுகிறது. இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கலவரக்காரர்களை கைது செய்தனர். தற்போது வன்முறையை தடுக்கும் விதமாக ஆந்திராவின் மச்சார்லா நகரத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

144 தடை உத்தரவு:

ஆந்திர மாநிலத்தின் ஆளும் கட்சியான ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சியினர் மாநிலம் முழுவதும் பேரணி நடத்தி வருகின்றனர். நேற்று தெலுங்கு தேசம் கட்சியினர் பல்நாடு மாவட்டம் பகுதிகளில் பேரணியாக சென்றனர். அப்போது தெலுங்கு தேச கட்சியினரை எதிர்த்து ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலால் அப்பகுதி முழுவதும் பரபரப்பு நிலவியது. இரு கட்சியினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டு வன்முறையில் ஈடுபட்டனர். அத்துடன் ஓய்.எஸ். ஆர் காங்கிரஸ் கட்சியினர் தெலுங்கு தேச கட்சியின் அலுவலகத்தை தாக்கி பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர்.

அடேங்கப்பா.. 2023ல் தமிழக பள்ளிகளுக்கு 70 நாட்கள் விடுமுறையா? – ஹாப்பி நியூஸ்!

Exams Daily Mobile App Download

இதனை அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மேலும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக தீயை அணைக்க முற்பட்டனர். இந்த சம்பவம் ஆந்திர மாநிலத்தில் தற்போது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தால் தற்போது ஆளுங்கட்சி மற்றும் எதிர் கட்சியினர் இடையே மோதல் வெடிக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதனை கருத்தில் கொண்டு பாதுகாப்பு நடவடிக்கையாக மச்சார்லா நகரம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!