சித்திரை முதல் நாளில் சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்படும் – தமிழக அரசு உத்தரவு!!
பத்திரப்பதிவு துறை:
தமிழகத்தில் விளைநிலம், வீடு போன்ற சொத்து பரிமாற்றங்களின் போது அரசு அலுவலகமான சார்பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்யப்படுகிறது. தமிழகத்தில் மொத்தம் 507 சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளது. பொதுவாக மக்கள் தங்களின் புதிய சொத்துகளை சாதாரண நாட்களை விட மங்களகரமான நாட்களில் பதிவு செய்வதை அதிகம் விரும்புகின்றனர்.
தமிழகத்தில் புதிதாக 6984 பேருக்கு கொரோனா தொற்று – 18 பேர் உயிரிழப்பு!!
கூடுதல் கட்டணம்:
குறிப்பாக சித்திரை முதல் நாள், ஆடிப்பெருக்கு, தைப்பூசம் போன்ற நாட்களில் பதிவு செய்வதற்கு மக்கள் கோரிக்கைகளை அரசுக்கு வைத்தனர். ஆனால் அரசு விடுமுறை நாட்களில் பத்திர அலுவலகங்கள் விடுமுறையில் இருக்கும். இதனை அடுத்து மங்களகரமான நாட்களில் பத்திரவு பதிவு அலுவலகங்கள் செயல்படும் என்றும், அதற்கு கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் பதிவுத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் அறிவித்துள்ளார்.
அதிக பதிவுகள்:
தமிழ் புத்தாண்டு சித்திரை முதல் நாளான இன்று புதிதாக 22,000 சொத்துக்கள் பத்திரபதிவு செய்ய இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களும் இன்று செயல்பட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இன்று அதிக அளவிலான பத்திரங்கள் பதிவு செய்ய இருப்பதால் கூடுதலாக ஊழியர்கள் நியமிக்கப்பட பதிவுத்துறை ஐஜி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்