தமிழகத்தில் ஜூன் 14 முதல் பள்ளிகள் திறப்பு – தலைமை ஆசிரியர்கள் கோரிக்கை!
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஜூன் 14 வரை பேருந்துகள் செயல்பட அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்ட நிலையில், தலைமை ஆசிரியர்கள் பள்ளிக்கு வரும் உத்தரவை பரிசீலனை செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் கோரிக்கை:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொது போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் கல்வி நிறுவனங்கள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாக மட்டுமே வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
தமிழகத்தில் ஜூன் 21 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு? உயர் அதிகாரிகள் பரிந்துரை!
இந்நிலையில் பள்ளிகளில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 14 முதல் திறக்கப்படும் எனவும் தலைமை ஆசிரியர்கள் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் சங்க செயலாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தமிழகத்தில் வருகிற ஜூன் 14 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் வருகிற 14 ஆம் தேதி அனைத்து தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலை பள்ளி வரை உள்ள தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் அனைவரும் பள்ளிக்கு வர வேண்டும் என தெரிவித்துள்ளனர். ஊரடங்கு காரணமாக பொது போக்குவரத்து ரத்து செய்யப்பட்ட காரணத்தினால் தொலைதூரத்தில் இருந்து பள்ளிக்கு வர முடியாத நிலை ஏற்படுகிறது.
TN Job “FB Group” Join Now
மேலும் இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு வர இ-பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பல ஆசிரியர்கள் அவசர தேவைகளுக்கு வெளி ஊர்களுக்கு சென்று பேருந்துகள் இல்லாமல் கஷ்டப்படுகின்றனர். பல ஆசிரியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர். இதனால் பள்ளிக்கு வர அச்சம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீடிக்கப்பட்டு பஸ், ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டதும் பள்ளிகள் திறப்பது குறித்து பரிசீலனை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.