தமிழகத்தில் ஜூன் 21 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு? உயர் அதிகாரிகள் பரிந்துரை!
தமிழகத்தில் ஜூன் 14ம் தேதியுடன் முடிவடைய உள்ள தளர்வுகள் உடன் கூடிய முழு ஊரடங்கு உத்தரவை, மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு, உயர் அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர்.
முழு ஊரடங்கு நீட்டிப்பு
கொரோனா 2 ஆம் அலை காரணமாக தமிழகத்தில் மே 10 ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் முதல் 2 வார முழு ஊரடங்கில் சில தளர்வுகள் கொடுக்கப்பட்டது. அதன் படி காய்கறி, மளிகை கடைகள் அனைத்தும் செயல்பட்டு வந்தது. இந்த பொது முடக்கத்தின் போதும் தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வந்தது. தற்போது தீவிர கட்டுப்பாடுகள் காரணமாக தொற்று குறைந்து வருகிறது. அதனால் ஜூன் முதல் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டு உள்ளன.
ஜூன் 14ம் தேதி அதிமுக எம்எல்ஏ.,க்கள் கூட்டம் – அதிகாரப்பூரவ அறிவிப்பு!
இந்த ஊரடங்கிலும் மக்களின் அத்தியாவசிய சேவைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் காய்கறி கடைகள் இயங்குவதற்கு மாலை 5 மணி வரை அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. தவிர அரசு அலுவலகங்கள் 30% ஊழியர்களுடன் செயல்படுவதற்கும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக அரசின் அறிவிப்பின் படி ஜூன் 14 ஆம் தேதியுடன் முழு ஊரடங்கு உத்தரவு முடிவடைய உள்ளது.
இந்த நிலையில் மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில், ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இன்று காலை 11 மணியளவில், சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் சுப்பிரமணியன், தலைமை செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், டிஜிபி திரிபாதி உள்ளிட்டோர் பங்கு பெற்றனர். அதில் ஒரு வார ஊரடங்கு நீட்டிப்புக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.
TN Job “FB Group” Join Now
அந்த வகையில் தமிழகத்தில் ஜூன் 21 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால், கொரோனா தொற்று அதிகமுள்ள மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள், பூங்காக்கள் திறக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் தமிழகத்தில் கிட்டத்தட்ட 25 மாவட்டங்களில் கொரோனா தொற்று குறைந்துள்ளதால், மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுமா? என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.