ஜூலை 19 முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!!
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு மாநிலங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் ஜூலை 19 முதல் சண்டிகர் மாநிலத்தில் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன.
பள்ளிகள் திறப்பு:
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலைமையை சரி செய்ய மத்திய மற்றும் மாநில அரசு பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தின. அதன் காரணமாக கொரோனா பரவல் குறைய தொடங்கியுள்ளது. தினசரி கொரோனா பாதிப்பு 4 லட்சத்தில் இருந்து 40 ஆயிரமாக குறைந்துள்ளது. இதனால் பல மாநிலங்களில் ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
மாநில அரசுகள் கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும் – மத்திய உள்துறை செயலாளர் கடிதம் !!
மேலும் மாநிலங்களில் அனைத்து கடைகளும் செயல்பட்டு மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளன. மேலும் பல மாநிலங்களில் அனைத்து தளர்வுகளும் நீக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் சண்டிகர் மாநிலத்தில் கொரோனா பரவல் குறைவாக உள்ளதால் பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. இதுகுறித்து அனைத்து மாணவர்களின் பெற்றோர்களுடன் கருத்து கேட்பு நடத்தப்பட்டது.
TN Job “FB Group” Join Now
அதன் பின்னர் ஜூலை 19 ஆம் தேதி முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என அம்மாநில கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் அனைத்து மாணவர்களும் ஆசிரியர்களும் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்திருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அதே போல திரையரங்குகள் மற்றும் ஸ்பாக்கள் 50 சதவிகித வாடிக்கையாளர்களுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.