மாநில அரசுகள் கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும் – மத்திய உள்துறை செயலாளர் கடிதம் !!

0
மாநில அரசுகள் கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும் - மத்திய உள்துறை செயலாளர் கடிதம் !!
மாநில அரசுகள் கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும் - மத்திய உள்துறை செயலாளர் கடிதம் !!
மாநில அரசுகள் கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும் – மத்திய உள்துறை செயலாளர் கடிதம் !!

இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்க கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை செயலாளர் அஜய்பல்லா அனைத்து மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் கடிதம் அனுப்பியுள்ளார்.

மத்திய உள்துறை செயலாளர் கடிதம் :

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை காட்டுத்தீ போல பரவி வருகிறது. நோய் பரவலை தடுக்க மத்திய மாநில அரசுகள் தடுப்பு பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது. மாநிலங்கள் முழுவதும் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. மக்கள் கூடுவதை தவிர்க்க பொது இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் அரசு வலியுறுத்துகிறது. இரண்டாம் அலை இந்தியாவில் பெரும் இழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் மக்கள் தங்கள் வாழ்வாதாரம் இழந்து பொருளாதார ரீதியாக பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

மீண்டும் வார இறுதி ஊரடங்கு உத்தரவு – கேரளா அரசு அறிவிப்பு!!

இந்த நிலையில் தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வந்தது. இந்த தடுப்பூசிகள் உடலில் ஆன்டிபாடிகளை அதிக அளவு உற்பத்தி செய்து தொற்றிலிருந்து நம்மை பாதுகாக்கிறது. அதனால் மாநில அரசுகள் தடுப்பூசிகள் செலுத்தும் பணியை துரிதப்படுத்தியது. 18 வயது முதல் அனைவரும் இலவசமாக தடுப்பூசிகளை செலுத்தி வருகிறது. மக்களும் ஆர்வத்துடன் இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்தி வருகின்றனர். மேலும் தொடர் ஊரடங்கும் அமலில் உள்ளது, இதன் விளைவாக கொரோனா பாதிப்புகள் குறைந்து வருகிறது. இந்த செய்தி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.

TN Job “FB  Group” Join Now

ஆனாலும் 3 ம் அலை வரும் அது எதிர்பாராத அளவு பாதிப்புகளை ஏற்படுத்தும் எனவும் குழந்தை தாக்கும் எனவும் பெருந்தொற்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இந்த நிலையில் மேலும் கொரோனா தொற்றை குறைக்கவும் , மூன்றாம் அலையிலுருந்து தப்பிக்கவும், மாநில மற்றும், யூனியன் பிரதேச அரசுகள் கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும் என்றும் மக்கள் கூடும் இடங்களை கண்டறிந்து கண்காணிக்க வேண்டும் என்றும் மத்திய உள்துறை செயலாளர் அஜய்பல்லா அனைத்து மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் கடிதம் அனுப்பியுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!