1 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – மீண்டும் பள்ளிகள் திறப்பு!
கர்நாடகாவில் 1 முதல் 10ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறைக்கு பின்னர் இன்று முதல் (மே 16) பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. 2022 – 2023ம் கல்வியாண்டில் பள்ளிகள் முன் கூட்டியே திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பள்ளிகள் திறப்பு:
இந்தியா முழுவதும் பரவிய கொரோனா பெருந்தொற்றில் இருந்து மாணவர்களை பாதுகாக்கும் பொருட்டு அனைத்து மாநிலங்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நேரத்திலும் மாணவர்களின் கல்வி நிலையை கருத்தில் கொண்டு ஆன்லைன் வழி வகுப்புகள் நடத்தப்பட்டு கற்றல் இடைவெளி சரி செய்யப்பட்டது. இருப்பினும் நேரடி கற்றல் கற்பித்தல் முறைக்கு இது ஈடாகாது என்பதால் விரைவில் பள்ளிகளை திறக்க கோரிக்கைகள் எழுந்தது. இதனையடுத்து தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு மாணவர்களுக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு தொற்று பரவல் குறைக்கப்பட்டது.
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அறிக்கை!
இந்த நிலையில் மாநில அரசுகள் படிப்படியாக பள்ளிகளை திறந்து நேரடி வகுப்புகளை தொடங்கியது. கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்கு பிறகு கடந்த 2022ம் ஆண்டின் இறுதியில் தான் வழக்கம் போல வகுப்புகள் நடைபெற தொடங்கியது. அப்போது பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டு தேர்வு கால அட்டவணைகளும் வெளியிடப்பட்டது. மற்ற மாநிலங்களை தொடர்ந்து கர்நாடகாவிலும் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மற்றும் பிற வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வு நடத்தப்பட்டது.
Exams Daily Mobile App Download
நடப்பாண்டு விரைவாக தேர்வுகள் நடத்தி முடிக்கவும் 2022 – 2023ம் கல்வியாண்டில் முன்கூட்டியே பள்ளிகளை திறக்கவும் திட்டமிடப்பட்டது. இதனையடுத்து தேர்வுகளை நடத்தி கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. அதன் பிறகு அறிவிக்கப்பட்டபடி இன்று (மே 16) 1 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. முதல் நாள் பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும் என்று கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.