தமிழகத்தில் எந்தெந்த வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்க அனுமதி? கல்லூரிகளுக்கு ஜன.20 வரை விடுமுறை!
தமிழகத்தில் அதிகரித்தும் வரும் வரும் ஓமிக்ரான் மற்றும் கொரோனா பரவல் தடுப்பு பணியாக புதிய கட்டுப்பாடுகளை விதிக்கப்பட்டுள்ளதும் மேலும் மாணவர்கள் நலன் கருதி 1 – 9 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 10,11,12 ஆகிய வகுப்புகளுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை:
தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைந்துள்ள நிலையில் மாணவர்களின் கல்வி நிலையை கருத்தில் கொண்டு மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 10, 11,12ம் வகுப்புகளுக்கு திருப்புதல் தேர்வும் நடத்தப்பட்டு மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 25ம் தேதி முதல் ஜனவரி 2 வரை மொத்தம் 9 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறைக்கு பின் ஜனவரி 3ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவித்திருந்த நிலையில் கொரோனா மற்றும் ஓமிக்ரான் நோய் தொற்று அதி வேகமாக பரவி வருகிறது.
சென்னையில் நாளை (ஜன.6) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
இந்த நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டால் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதை கருத்தில் கொண்டு அரசு தொடக்க மற்றும் நடுநிலை பள்ளி மாணவர்களுக்கு மட்டும் விடுமுறையை நீடித்தது. ஜனவரி 10ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று அறிவித்தது. இந்த நிலையில் மாநிலம் முழுவதும் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 1-9 ம் வரையிலான பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – கொரோனா தடுப்பூசி கட்டாயம்! முதல்வர் உத்தரவு!
10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு பொதுத் தேர்வுகள் நடத்தப்பட இருப்பதால் . அவர்களின் கற்றல் நிலையை கருதி கொண்டு அம்மாணவர்களுக்கு மட்டும் தொடர்ந்து நேரடி வகுப்புகள் நடைபெறும் என்று அரசு தெரிவித்துள்ளது. மேலும் அரசு, தனியார் மருத்துவ மற்றும் துணை மருத்துவக் கல்லூரிகள் தவிர இதர கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணாக்கர்கள் தேர்வு எழுதும் பொருட்டு ஜனவரி 20ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. செமஸ்டர் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.