1 முதல் 5ம் வகுப்புகளுக்கு டிச.27ம் தேதி பள்ளிகள் திறப்பு – அரசு அறிவிப்பு!
டெல்லி பள்ளிகள் டிசம்பர் 27ம் தேதி முதல் 5ம் வகுப்பு வரை மீண்டும் திறக்கப்படும் என தேசிய தலைநகர் மண்டலம் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் உள்ள காற்று தர மேலாண்மை ஆணையம் (சிஏக்யூஎம்) அனுமதி அளித்துள்ளது.
பள்ளிகள் திறப்பு:
நாட்டின் தலைநகரான டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரித்துள்ள காரணத்தால் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மாதம் முதல் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளார். மேலும், காற்று மாசு அளவை குறைக்கும் நோக்கமாக, டெல்லி முழுவதும் கட்டுமானப் பணிகள், அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலக ஊழியர்களும் 100% வீட்டில் இருந்து பணியை தொடர அறிவுறுத்தப்பட்டிருந்தது. தொடர்ந்து காற்று மாசு அதிகரிக்கும் நிலையில், இந்த நடவடிக்கைகள் தொடரும் என்றும் முதல்வர் அறிவுறுத்தியிருந்தார். இந்நிலையில், காற்றின் மாசு அளவு சற்று குறைந்திருந்த காரணத்தால் கல்வி நிறுவனங்களை படிப்படியாக திறக்க காற்று தர மேலாண்மை ஆணையம் டிசம்பர் 17ம் தேதி அனுமதி அளித்தது.
இன்று முதல் தினசரி 11 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு அமல் – மாநில அரசு அறிவிப்பு!
இதனால் முதல் கட்டமாக 6ம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் உள்ளவர்களுக்கு டிசம்பர் 18ம் தேதி முதல் பள்ளிகள் திறக்க அனுமதிக்கப்பட்டது. சமீபத்திய ஆய்வு அறிக்கையின் படி டெல்லியின் காற்றுத் தரக் குறியீடானது ‘கடுமையான’ பிரிவில் இருந்து ‘மிகவும் மோசமான’ வகைக்கு மாற்றியுள்ளது. இதனால் பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் படிப்படியாக மீண்டும் திறக்கப்படலாம் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் தற்போது, டெல்லி பள்ளிகள் டிசம்பர் 27ம் தேதி முதல் 5ம் வகுப்பு வரை மீண்டும் திறக்கப்படும் என தேசிய தலைநகர் மண்டலம் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் உள்ள காற்று தர மேலாண்மை ஆணையம் கூறியுள்ளது.
தமிழக மாதிரி பள்ளிகளில் ஆசிரியரல்லாத பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு – டிச.28 கடைசி நாள்!
மேலும், மற்ற வகுப்புகளுக்கு ன்சிஆர் மற்றும் ஜிஎன்சிடிடி மாநில அரசுகள் பள்ளிகள் கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள், திறன் மேம்பாடு, நூலகங்கள் மற்றும் பயிற்சி நிறுவனங்களில் நேரடி வகுப்புகளை மீண்டும் தொடங்குவதற்கு உடனடியாக முடிவெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. காற்றின் தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு மற்றும் ஆராய்ச்சி (SAFAR) தரவுகளின்படி, சனிக்கிழமையான இன்று டெல்லியின் காற்றின் தரம் மிகவும் மோசமாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பெற்றோர்கள் மேலும் அச்சத்தில் உள்ளனர்.