தமிழக மாதிரி பள்ளிகளில் ஆசிரியரல்லாத பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு – டிச.28 கடைசி நாள்!
திருப்பூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ் மூலனூர் மற்றும் குண்டடம் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியரல்லாத பணியிடங்களை நிரப்பும் விதமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காலிப்பணியிடம்:
தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து இயல்புநிலை திரும்பி வருவதை தொடர்ந்து பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மூலனூர் மற்றும் குண்டடம் பகுதிகளில் உள்ள மாதிரி பள்ளிகளில் ஆசிரியரல்லாத பணிகளுக்கு ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் விதமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்கள் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ் முற்றிலும் தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்ப உள்ளதாக மாவட்ட கலெக்டர் வினீத் அவர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் உங்களது கல்விச்சான்றிதழ் நகல் மற்றும் சுயவிபரத்தை கீழ்வரும் முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் சென்று சேர டிச.28ம் தேதி கடைசி நாளாக குரிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை அனுப்பவேண்டிய முகவரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, மாவட்ட திட்ட அலுவலகம், அறை எண் 521, 5வது தளம், மாவட்ட கலெக்டர் அலுவலகம், திருப்பூர். மேலும் பணியிடம் மற்றும் ஊதியம் குறித்த விபரங்களை பின்வருமாறு காணலாம்.
பணி: இளநிலை உதவியாளர்
- ஊதியம்: 6,000
- கல்வித்தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி தமிழ் ஆங்கிலம் தட்டச்சில் தேர்ச்சி, மேல்நிலை அல்லது பட்டப்படிப்பு, அலுவலக மேலாண்மை பணிகளில் 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: நூலகர்
- ஊதியம்: 6,000
- கல்வித்தகுதி: மேல்நிலைப்படிப்பு மற்றும் அலுவலக மேலாண்மை பணிகளில் 1 முதல் 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: அலுவலக உதவியாளர்
- ஊதியம்: 4,500
- கல்வித்தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: தோட்டக்காரர்
- ஊதியம்: 4,500
- கல்வித்தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்று தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.