இன்று முதல் தினசரி 11 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு அமல் – மாநில அரசு அறிவிப்பு!
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் காரணமாக கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்து வருகிறது. அதை தொடர்ந்து உத்தரப் பிரதேசத்தில் ஓமைக்ரான் பரவலை தடுக்க ஊரடங்கு கட்டுப்பாடுகளை அம்மாநில அரசு அமல்படுத்த உள்ளது.
முழு ஊரடங்கு
தற்போது வர இருக்கும் கொரோனா நோய் பரவலின் 3-வது அலையை எதிர்கொள்ள பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அத்துடன் தற்போது தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமைக்ரான் வைரஸ் இங்கிலாந்து, அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. அத்துடன் இந்தியாவில் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, ஹரியானா, கேரளா மற்றும் உத்தரப்பிரதேசம் மாநிலங்களில் ஓமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் ஓமைக்ரான் தொற்று அதிகம் பரவல் தடுக்க பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அறிவித்து வருகிறது.
தமிழக மாதிரி பள்ளிகளில் ஆசிரியரல்லாத பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு – டிச.28 கடைசி நாள்!
மேலும் அதில் குறிப்பாக மகாராஷ்டிர மாநிலத்தில் 20 பேருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் இதுவரை ஓமைக்ரான் தொற்று எண்ணிக்கை 109-ஆக உயர்ந்துள்ளது. ஆதலால் அங்கு இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை முழு ஊரடங்கு கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இரவு நேரங்களில் 5 பேருக்கு மேல் கூட்டம் கூட கூடாது என்றும் அறிவித்துள்ளது. அத்துடன் பொதுக்கூட்டங்கள், பேரணிகளுக்கு தடை என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதையடுத்து உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஓமைக்ரான் தொற்று 2 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மேலும் தொற்று பரவாமல் தடுக்க அரசு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்து வருகிறது. அதன்படி இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இதனை நாளை முதல் அமல்படுத்த உள்ளதாக உத்தரப்பிரதேச அரசு அறிவித்துள்ளது. ஏனெனில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் விரைவில் தேர்தல் நடக்க உள்ளதால் இங்கு கடுமையான கட்டுப்பாடுகளை அறிவித்து வருகிறது.