ஆகஸ்ட் 7 முதல் 9 – 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு – அரசு உத்தரவு!
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் அவர்கள் மாநிலத்தில் 50% மாணவர்களுடன் கல்வி நிறுவனங்களை ஆகஸ்ட் 7ம் தேதி முதல் மீண்டும் திறக்க உத்தரவிட்டுள்ளார்.
கல்வி நிலையங்கள் திறப்பு:
நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களுக்கு பாடங்கள் அனைத்தும் ஆன்லைன் முறையில் கற்பிக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா தொற்று பரவல் குறைந்துள்ள மாநிலங்களில் மீண்டும் பள்ளிகளை திறக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பீகார் முதல்வர் நிதிஷ் குமார் நேற்று மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் 9 முதல் 12ம் வகுப்பு வரை, கல்லூரிகள் மற்றும் பயிற்சி நிறுவனங்களை ஆகஸ்ட் 7 முதல் மீண்டும் திறக்க உத்தரவிட்டுள்ளார்.
TCS, Wipro உள்ளிட்ட பிரபல நிறுவனங்களில் HR வேலைவாய்ப்பு – தகுதி, பணியிடம் விளக்கம்!
பள்ளிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்களுக்கான பாதுகாப்பு செயல்முறைகள் அனைத்தும் இன்று வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் அறிவுறுத்தலின் படி அனைவரும் அனைத்து கோவிட் -19 பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் 50% மாணவர் வருகையுடன் வகுப்புகள் தொடங்கப்படும். அனைத்து கல்வி நிறுவனங்களும் வகுப்பறைகள் மற்றும் பிற பகுதிகளை முறையாக சுத்தம் செய்வதை உறுதி செய்ய வேண்டும்.
TN Job “FB Group” Join Now
மேலும், நேரடி வகுப்புகள் கட்டாயமாக்கப்படவில்லை. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் வழக்கம்போல் நடைபெறும். மாநிலத்தின் பல்வேறு தொழில் முறை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தேர்வுகளும் மீண்டும் தொடங்கப்படும். தகுந்த வயதுடைய மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வி நிறுவன ஊழியர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. அரசின் இந்த கட்டுப்பாடுகளுக்கு கல்வித் துறை மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் ஒத்துழைக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.