ஜனவரி 3ம் தேதி 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு – முதல்வர் உத்தரவு!
ஒடிசா மாநிலத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் எஸ்.ஆர்.தாஷ் அவர்கள் முதல்வர் உத்தரவுப்படி மாநிலத்தில் உள்ள சுமார் 27,000 பள்ளிகளில் 2022 ஜனவரி 3ம் தேதி முதல் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளார்.
பள்ளிகள் திறப்பு:
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2ம் அலை பாதிப்புகள் காரணமாக மாணவர்களுக்கு கல்வி நிலையங்களில் நேரடி வகுப்புகள் ஏதும் நடத்தப்படவில்லை. ஆன்லைன் வழி வகுப்புகள் மட்டுமே நடத்தப்பட்டது. இதனால் மாணவர்களின் கற்றல் அடைவுகள் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து இதே நிலை நீடிப்பது குழந்தைகளை மனதளவில் பாதிக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், நோய் தொற்று பாதிப்புகள் குறைந்து வந்த காரணத்தால் பல மாநிலங்களில் படிப்படியாக கல்வி நிலையங்கள் திறக்கப்பட்டது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு 14% அகவிலைப்படி (DA) உயர்வு – முதல்வருக்கு நன்றி!
நேற்றைய நிலவரப்படி மாநிலத்தில் மிகவும் குறைந்தபட்ச பாதிப்பாக 8 பேர் என்ற எண்ணிக்கையில் மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. கோவிட்-19ன் மூன்றாவது அலையைச் சமாளிக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முதல்வர் நவீன் பட்நாயக் அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட சில மணிநேரங்களில் பள்ளி மற்றும் வெகுஜன கல்வி அமைச்சர் எஸ்ஆர் டாஷ் முக்கிய அரசிவிப்பை வெளியிட்டுள்ளார். முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, ஜனவரி 3, 2022 முதல் மாநிலத்தில் உள்ள சுமார் 27,000 பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் மீண்டும் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
சென்னையில் அமலுக்கு வரும் கட்டுப்பாடுகள், புத்தாண்டு கொண்டாட தடை – காவல்துறை அதிரடி!
மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளும் தொடரும், ஆஃப்லைன் வகுப்புகளிலும் பெற்றோர்களின் சம்மதத்துடன் கலந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மாதிரி தேர்வு திட்டமிடப்பட்டபடி ஜனவரி 10, 2022 முதல் மீண்டும் தொடங்கும் என்றும், 6 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு வழங்கப்பட்ட நிலையான இயக்க நடைமுறையை அனைத்து தொடக்கப் பள்ளிகளும் பின்பற்ற வேண்டும் என்று கூறினார். 1 முதல் 5 வரையிலான வகுப்புகள் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை இடைவேளையின்றி நடைபெறும். மாணவர்களுக்கு சமைத்த உணவுகள் வழங்கப்படாது அதற்கு பதிலாக மாணவர்களுக்கு உலர்ந்த ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.