தமிழக அரசு ஊழியர்களுக்கு 14% அகவிலைப்படி (DA) உயர்வு – முதல்வருக்கு நன்றி!

0
தமிழக அரசு ஊழியர்களுக்கு 14% அகவிலைப்படி (DA) உயர்வு - முதல்வருக்கு நன்றி!
தமிழக அரசு ஊழியர்களுக்கு 14% அகவிலைப்படி (DA) உயர்வு - முதல்வருக்கு நன்றி!
தமிழக அரசு ஊழியர்களுக்கு 14% அகவிலைப்படி (DA) உயர்வு – முதல்வருக்கு நன்றி!

தமிழக அரசு ஊழியர்களுக்கு கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 14% அகவிலைப்படி உயர்வு வரும் ஜனவரி 1 முதல் வழங்கப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதையடுத்து அனைத்து தரப்பினரும் அரசுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

அகவிலைப்படி:

தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது முதல்வர் முக ஸ்டாலின் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்த்தப்படும், மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும், அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அளித்தார். இவர் ஆட்சிக்கு வந்தவுடன் அவற்றை நிறைவேற்றும் படி அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனையடுத்து அரசு ஊழியர்களுக்கு 14% அகவிலைப்படி உயர்த்தப்படும் இது அடுத்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று முதல்வர் தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் பள்ளிகள் மூடல்? அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய தகவல்!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 31% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் புத்தாண்டை முன்னிட்டு மேலும் 3% அகவிலைப்படி உயர்த்தப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு அறிவிக்கப்பட்ட 14 சதவீதத்தில் இருந்து மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக 31% ஆக உயர்த்தியுள்ளது. இது ஜனவரி 1 முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாநில தலைவர் முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார். அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் இதர கோரிக்கைகளையும் முதல்வர் விரைவில் பரிசீலித்து நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

சென்னையில் அமலுக்கு வரும் கட்டுப்பாடுகள், புத்தாண்டு கொண்டாட தடை – காவல்துறை அதிரடி!

பொங்கல் பரிசாக சி மற்றும் டி பிரிவு ஊழியர்க்கு ரூ.3 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளதற்கு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நல கூட்டமை தலைவர் நன்றி தெரிவித்துள்ளார். சொன்னபடி அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டதை போல பழைய ஓய்வூதிய திட்டமும் அமல்படுத்தப்படும் என்றும் நம்புகிறோம். உயர்த்தப்பட்டுள்ள அகவிலைப்படியால் பல லட்சம் அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்கள் பயன்பெறுவார்கள் என்று அரசு தெரிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!