தமிழகம் முழுவதும் பள்ளிகள் மூடல்? அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய தகவல்!
தமிழகத்தில் ஒமிக்ரான் தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் பள்ளிகளை மூடுவது குறித்து மருத்துவ நிபுணர்களிடம் கலந்தாலோசித்த பின்னர் முடிவு எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல் அளித்துள்ளார்.
பள்ளிகள் மூடல்
கடந்த வாரத்தில், முதல் ஒமிக்ரான் தொற்றை பதிவு செய்துள்ள தமிழகத்தில் இந்த நோய் பரவலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் இதுவரை 45 பேர் ஒமிக்ரான் வைரசுக்கு எதிராக தங்களது பாசிட்டிவ் விகிதத்தை பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை வரும் நாட்களில் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது. இது தவிர கடந்த 8 நாட்களாக தமிழகத்தில் கொரோனா 2ம் அலைப் பரவலின் பாதிப்பும் 500க்கும் மேலே பதிவு செய்யப்பட்டு வருகிறது.
சென்னையில் அமலுக்கு வரும் கட்டுப்பாடுகள், புத்தாண்டு கொண்டாட தடை – காவல்துறை அதிரடி!
இதற்கிடையில் அந்தந்த மாநிலங்களில் நிலவும் கொரோனா வைரஸின் பாதிப்புகளை கவனத்தில் கொண்டு இரவு ஊரடங்கு, 144 தடை உத்தரவு போன்ற கட்டுப்பாடுகளை விதிக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கிறது. அந்த வகையில் தமிழகத்திலும் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து வரும் நாட்களில் அரசு முக்கிய ஆலோசனைகளை மேற்கொள்ள இருக்கிறது. இப்போது ஒமிக்ரான் பரவல் அச்சத்துக்கு மத்தியில் டெல்லி அரசாங்கம் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களை மூடியுள்ளது.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – பொங்கல் பரிசு 2022 திட்டம்!
அதே போல தமிழகத்திலும் இரட்டை இலக்கங்களில் பதிவாகி வரும் ஒமிக்ரான் பரவலை கருத்தில் கொண்டு பள்ளி, கல்லூரிகள் மூடப்படுமா என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். அதாவது, சென்னை தரமணியில் உள்ள ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் அன்பில் மகேஷ், தமிழகத்தில் ஒமிக்ரான் பரவல் காரணமாக பள்ளிகளை மூடும் நடவடிக்கை குறித்து, முதல்வர் முக ஸ்டாலின் மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் ஆலோசனை செய்த பின்னர் முடிவுகளை எடுப்பார் என்று குறிப்பிட்டுள்ளார்.