சென்னையில் அமலுக்கு வரும் கட்டுப்பாடுகள், புத்தாண்டு கொண்டாட தடை – காவல்துறை அதிரடி!
தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் 2022 ஆம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதித்து பொதுமக்கள் தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று சென்னை பெருநகர காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
வழிகாட்டு நெறிமுறைகள்:
கொரோனா வைரஸ் தொற்று தமிழகத்தில் அதிகமாக பரவி வருகிறது. தற்போது தென் ஆப்பிரிக்காவில் புதிதாக கண்டறியப்பட்ட ஓமைக்ரான் தொற்றும் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. இத்தகைய வைரஸ் பரவலை தடுக்க தமிழக அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகளை மேற்கொண்டுள்ளது. சென்னையில் வருகிற டிசம்பர் 31 ஆம் தேதி நள்ளிரவில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. மேலும் வழிகாட்டுதல் நெறிமுறைகளை பிபான்ற வேண்டும் என சென்னை பெருநகர காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – பொங்கல் பரிசு 2022 திட்டம்!
2002 ஆம் புத்தாண்டு கொண்டாட்டம் குறித்து சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் திரு.சங்கர் அவர்கள் கட்டுப்பாடு நெறிமுறைகளை வெளியிட்டார். அதில் வருகிற டிசம்பர் 31 ஆம் தேதி இரவு பொதுமக்கள் சென்னை பெருநகரில் மெரினா கடற்கரை, நீலாங்கரை கடற்கரை, கிழக்கு கடற்கரை ஆகிய இடங்களில் ஒன்று கூட வேண்டாம் என்று தெரிவித்தார். மேலும் சாலையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என்று கூறினார். பொது இடங்களில் மக்கள் வாகனங்களை நிற்பாட்டி புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட வேண்டாம் என்று கேட்டு கொண்டார்.
ஜனவரி 7 வரை 10 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல் – புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு!
டிசம்பர் 31 ஆம் தேதி இரவு காவல்துறை அதிகாரிகள் வாகன சோதனை சாவடிகள் அமைத்து பொதுமக்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுகிறார்களா என்று கண்காணிக்கப்படுவார்கள். தமிழக அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி இரவு 11.00 மணி வரை கடைகள் செயல்பட அனுமதித்துள்ளது. ஓட்டல் நிகழ்ச்சிகள், பைக் ரேஸ், நடனம் மற்றும் இசை நிகழ்ச்சிகள் போன்றவைக்கு அரசு அனுமதி அளிக்கவில்லை. மேலும் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.