நவ.4ம் தேதிக்கு பிறகு ஆரம்ப பள்ளிகள் மீண்டும் திறப்பு – மாநில அரசு திட்டம்?

0
நவ.4ம் தேதிக்கு பிறகு ஆரம்ப பள்ளிகள் மீண்டும் திறப்பு - மாநில அரசு திட்டம்?
நவ.4ம் தேதிக்கு பிறகு ஆரம்ப பள்ளிகள் மீண்டும் திறப்பு - மாநில அரசு திட்டம்?
நவ.4ம் தேதிக்கு பிறகு ஆரம்ப பள்ளிகள் மீண்டும் திறப்பு – மாநில அரசு திட்டம்?

மஹாராஷ்டிரா மாநிலத்தில் வரவிருக்கும் தீபாவளி பண்டிகைக்கு பிறகு ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கான நேரடி வகுப்புகளை மீண்டும் திறக்க அரசு ஆலோசித்து வருவதாக தற்போதைய தகவல்கள் வெளியாகியுள்ளது.

பள்ளிகள் திறப்பு

கொரோனா தொற்று நோய் வீழ்ச்சிக்கு பிறகு மாணவர்களுக்காக நடுத்தர, மற்றும் மேல்நிலை பள்ளிகளை மீண்டும் திறந்த மஹாராஷ்டிரா மாநில அரசு தற்போது தொடக்கப் பிரிவுகளுக்கான நேரடி வகுப்புகளையும் துவங்க ஆலோசித்து வருகிறது. இது குறித்து அம்மாநில பள்ளிக் கல்வி அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் பள்ளிக்கல்வித்துறையில் முதன்மை நிர்வாக அதிகாரிகளை (CEO) சந்தித்து, கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளில் இருந்து கருத்து சேகரிக்கும் பயிற்சிகளை தொடங்கி உள்ளதாக தெரிவித்துள்ளார்.

சீனாவில் விமானங்கள் ரத்து, பள்ளிகள் மூடல் – கொரோனா பாதிப்பு எதிரொலி!

இதற்கு முன்னதாக மஹாராஷ்டிரா மாநிலத்தில் 5ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அக்டோபர் 4ம் தேதி முதல் பள்ளிகள் தொடங்கியுள்ளன. ஆனால் கிராமப்புறங்களில் முதன்மை வகுப்பு பிரிவுகளான 1ம் வகுப்பு முதல் 4ம் வகுப்பு வரையும், நகர்ப்புறங்களில் 5ம் வகுப்பு முதல் 8ம் வரையிலான பள்ளிகளை திறக்கும் முடிவுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இப்போது தீபாவளி பண்டிகையை அடுத்து இம்மாணவர்களுக்கான வகுப்புகளை துவங்க அரசு ஆலோசித்து வருகிறது.

மஹாராஷ்டிரா மாநிலத்தின் கிராமப்புறங்களில் தகுந்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் 5 முதல் 7ம் வகுப்பு வரை பள்ளிகளை திறந்துள்ளன. அதே போல கல்லூரிகளிலும், இந்த வார தொடக்கத்தில் நேரடி வகுப்புகள் துவங்கியுள்ளது. இப்போது மஹாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே மாநில பணிக்குழுவுடன் இணைந்து பள்ளிகளை திறப்பதற்கான நிலையான இயக்க நடைமுறைகளை (SoPs) தயாரிப்பது குறித்து ஆலோசனை செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

BSNL நெட்ஒர்க் பயனர்கள் கவனத்திற்கு – சூப்பர் ரீசார்ஜ் ஆபர்கள் அறிவிப்பு! முழு விபரம் இதோ!

அந்த வகையில் பள்ளிகள் செயல்படும் நேரம், பள்ளி வளாகங்களில் மாணவர்களின் நுழைவு, சமூக இடைவெளி, சுகாதார கிளினிக்குகள், வகுப்பறைகள் மற்றும் வளாகங்களை சுத்தப்படுத்துதல் ஆகியவை வழிகாட்டுதல்கள் கீழ் கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கல்வி அதிகாரி ஒருவர், ‘இளைய தலைமுறையினருக்கு பாரம்பரிய பள்ளிக்கல்வி தேவைப்படுகிறது. அவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு இது மிகவும் முக்கியமானது. இந்த முடிவை அரசாங்கம் விரைவில் செயல்படுத்த வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!