தமிழகம் முழுவதும் பள்ளிகள் மீண்டும் மூடல்? அமைச்சர் திடீர் விளக்கம்! மாணவர்கள் அதிர்ச்சி!
தமிழகத்தில் தொடர்ந்து உருமாறிய கொரோனா வகையான ஒமைக்ரான் தொற்று தீவிரமாக பரவி வருவதால் மாணவர்களின் நலன் கருதி பள்ளிகள் மூடப்படுமா என்ற குழப்பம் மக்களிடையே எழுந்துள்ளது. இத்தகைய குழப்பத்தை தீர்க்கும் வகையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
பள்ளிகள் மூடல்?
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை குறைந்து வருவதை தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டது. அதாவது பொதுத்தேர்வு எழுதவுள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி மாணவர்களின் கற்றல் நலன் கருதி அவர்களுக்கு பள்ளிகள் முதலில் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டது. அவ்வாறு பள்ளிகள் திறக்கப்பட்டாலும் கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை கடைபிடிக்கும் விதமாக ஆசிரியர்கள் உட்பட அனைவரும் தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தப்பட்டது.
சென்னையில் தீவிரமெடுக்கும் கொரோனா, கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிப்பு – பொதுமக்கள் அச்சம்!
இந்நிலையில் காலம் கடந்து பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாணவர்களுக்கு தேர்வுகள் ஏதும் நடத்தப்படவில்லை. ஆனால் பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் கற்றல் திறனை ஆசிரியர்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்பதால் அரையாண்டு தேர்வுக்கு பதில் திருப்புதல் தேர்வு நடத்தப்பட்டது. அதன்பின் தற்போது அரையாண்டு தேர்வுக்கு வழங்கப்படும் விடுமுறை தற்போது மாணவர்களுக்கு விடப்பட்டுள்ளது. மேலும் விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் வரும் ஜன.3ம் தேதி திறக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து பள்ளிகள் திறக்கப்படும் ஜன.3ம் தேதி முதல் 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு சுழற்சி முறை இன்றி தினசரி வகுப்புகள் நடத்தும் வகையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஜன.2 வரை மழைக்கு வாய்ப்பு, மூடுபனி எச்சரிக்கை – வானிலை மையம் அறிக்கை!
இந்நிலையில் தற்போது உருமாறிய கொரோனா வகையான ஒமைக்ரான் தொற்று தற்போது தீவிரமாக பரவி வருவதால் பள்ளிகள் மூடப்படுமா என்ற குழப்பம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே எழுந்துள்ளது. ஏனெனில் இதுவரை தமிழகத்தில் மட்டும் 45 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே அவர்களது குழப்பத்தை தீர்க்கும் வகையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் ஒமைக்ரான் தொற்று பரவுவது குறித்து முதலமைச்சர் அவர்கள் ஆலோசனை நடத்தி முடிவுகள் வெளியிடுவார்கள் என்று விளக்கம் அளித்துள்ளார். டெல்லியில் தொற்று பரவல் அதிகரித்துள்ளதால் அங்கு பள்ளிகள் கல்லூரிகளை மூட அப்பகுதி முதலமைச்சர் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.