தமிழகத்தில் பிப்ரவரி மாதம் பள்ளிகளுக்கு மீண்டும் விடுமுறை – முக்கிய காரணம் இதோ!

0
தமிழகத்தில் பிப்ரவரி மாதம் பள்ளிகளுக்கு மீ்ண்டும் விடுமுறை - முக்கிய காரணம் இதோ!
தமிழகத்தில் பிப்ரவரி மாதம் பள்ளிகளுக்கு மீ்ண்டும் விடுமுறை - முக்கிய காரணம் இதோ!
தமிழகத்தில் பிப்ரவரி மாதம் பள்ளிகளுக்கு மீண்டும் விடுமுறை – முக்கிய காரணம் இதோ!

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து பள்ளி, கல்லூரிகள் பிப்ரவரி 1ம் தேதி முதல் திறக்கப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து இந்த மாதம் மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

பள்ளி விடுமுறை

தமிழகத்தில் கொரோனா பரவலின் முதல் மற்றும் 2ம் அலையின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மூடப்பட்ட பள்ளி மற்றும் கல்லூரிகள் கடந்த நவம்பர் மாதத்தில் திறக்கப்பட்டன. ஆனால் அப்போது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. அதனால் கனமழை காரணமாக அதிகமான நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. பருவமழை முடிந்த பிறகு டிசம்பர் மாதத்தில் வழக்கம் போல் பள்ளிகள் செயல்பட முடிவு செய்தனர். ஆனால் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமைக்ரான் பரவல் தமிழகத்தில் வேகமாக பரவ தொடங்கியது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிப்படை ஊதிய உயர்வு – 18 மாத DA நிலுவைத்தொகை! ஒரே நேரத்தில் வருமா?

அதனால் தமிழகத்தில் கொரோனா பரவலின் 3ம் அலை வேகமெடுக்க தொடங்கியது. அதனால் தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு ஊரடங்கு விதிமுறைகளை அரசு அமல்படுத்தியது. இதில் குறிப்பாக இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. அத்துடன் மாணவர்களின் நலன் கருதி பள்ளி, கல்லூரிகளுக்கு ஜனவரி 31ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது கொரோனா பரவல் குறைய தொடங்கியதால் பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – திருப்புதல் தேர்வுக்கான வழிகாட்டுதல்கள்!

இந்த அறிவிப்பில், தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகளை நடத்த அரசு அனுமதி அளித்தது. இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி நடைபெறும் என்று அரசு அறிவித்துள்ளது. அதன் காரணமாக பிப்ரவரி 18 முதல் 22 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. அத்துடன் தேர்தல் பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள். மேலும் அரசு பள்ளிகளில் வாக்குச்சாவடிகள் அமைக்கும் பணிகளும் நடைபெறும் என்பதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது தவிர்க்க முடியாததாக உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!