மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிப்படை ஊதிய உயர்வு – 18 மாத DA நிலுவைத்தொகை! ஒரே நேரத்தில் வருமா?

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிப்படை ஊதிய உயர்வு - 18 மாத DA நிலுவைத்தொகை! ஒரே நேரத்தில் வருமா?
மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிப்படை ஊதிய உயர்வு - 18 மாத DA நிலுவைத்தொகை! ஒரே நேரத்தில் வருமா?
மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிப்படை ஊதிய உயர்வு – 18 மாத DA நிலுவைத்தொகை! ஒரே நேரத்தில் வருமா?

மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த 18 மாத காலம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அகவிலைப்படி நிலுவைத்தொகை மற்றும் பிட்மெண்ட் பேக்டர் உயர்த்துவது குறித்து மத்திய அரசு ஊழியர் சங்கங்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில் தற்போது இது குறித்து முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.

முழு விவரம் இதோ:

கொரோனா பரவல் காரணமாய் 2020 ஆம் ஆண்டில் இருந்து மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி நிலுவை தொகை முடக்கப்பட்டது. 2021 ஆம் ஆண்டு அரசு ஊழியர்களுக்கு ஜூலை 1 ஆம் தேதிக்கு முன்பு 28 சதவீதமாக இருந்த அகவிலைப்படி பின்னர் 31 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது. இருப்பினும் ஜனவரி 2020 முதல் ஜூன் 2021 வரையிலான அகவிலைப்படி நிலுவைத்தொகை இன்னும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 18 மாத அகவிலைப்படி நிலுவை மொத்தமாக செலுத்தப்படலாம் என்று சமீபத்தில் தகவல் வெளியானது.

TNPSC குரூப் 2, 4 VAO தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு – நேர மாற்றம்! முழு விபரம் இதோ!

அதனை தொடர்ந்து ரூ.18,000 ஊதியத்தை ரூ.26,000 ஆக உயர்த்த வேண்டும் என்றும் பிட்மெண்ட் காரணியை 2.57 மடங்கில் இருந்து 3.68 ஆகவும் உயர்த்த வேண்டும் எனவும் மத்திய அரசு ஊழியர் சங்கங்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றன. இவ்வாறு அரசு ஊழியர்கள் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு பிட்மெண்ட் காரணியை உயர்த்தினால் அதன் விளைவாக அவர்களின் சம்பளம் உயரும். மேலும் ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ.8,000 ஆக உயரும். அதாவது மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் ரூ.18,000லிருந்து ரூ.26,000 ஆக உயர்த்தப்படும்.

நாளை (பிப்.6) மீண்டும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல் – மாநில அரசு உத்தரவு!

கடந்த ஆண்டு 7 வது ஊதியக்குழுவின் கீழ், மத்திய அரசு ஊழியர்களுக்கு 31% அகவிலைப்படி மற்றும் பல பெரிய சலுகைகளை வழங்கியது. ஆனால் நிலுவைத்தொகை பிரச்சனை குறித்து முடிவு எடுக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் மோடி அரசாங்கம் மத்திய மற்றும் மாநில ஊழியர்களின் அகவிலைப்படி நிலுவை தொகையை உயர்த்தும் என்றும் இதை தொடர்ந்து பிட்மெண்ட் பேக்டரையும் உயர்த்தும் என்றும் விரைவில் அறிவிப்புகள் வரலாம் என்று தகவல் தெரிவிக்கின்றன. மேலும் இவ்வாறு அகவிலைப்படி நிலுவை தொகையை உயர்த்தினாள் மத்திய ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியமும் உயர்த்தப்படும் என்று தெரிகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!