தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு மேலும் ஒரு வாரம் தள்ளிவைப்பு? அரசுக்கு கோரிக்கை!
தமிழகத்தில் 1 முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கு நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை ஒத்தி வைக்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
பள்ளிகள் திறப்பு:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை குறைந்து மக்கள் இயல்பு நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில் மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் 9 – 12 வரை உள்ள வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் சுழற்சி முறையில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அடுத்த கட்டமாக 1 முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இது குறித்து கருத்துகள் கேட்டறியபட்டு நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
12 முதல் 25 வயதுக்கு உட்பட்டோர் கவனத்திற்கு – இசைப்பள்ளி மாணவர் சேர்க்கை! விண்ணப்பங்கள் வரவேற்பு!
இந்த நிலையில் பள்ளிகள் திறப்பிற்கான முன்னேற்பாடு பணிகளை பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டது. தொடக்கக் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் அனைத்து வகை பள்ளிகளில் முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது. இதையடுத்து அனைத்து பள்ளிகளிலும் முன்னேற்பாடுகள் தீவிரமடைந்து வருகிறது. கொரோனா தொற்று பரவி வரும் சூழலில் மாணவர்கள் நலனில் அதிக கவனம் தேவை என்பதால் பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளையும் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் நாளை (அக்.12) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
இந்த நிலையில் தீபாவளி பண்டிகை வரவுள்ளதால் பொது இடங்களில் பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கிறது. இந்த சூழலில் கொரோனா நோய் தொற்று பரவும் அபாயம் அதிகரிக்கும் என்பதால் 1 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திருப்பினை நவம்பர் 1 ம் தேதிக்கு பதிலாக ஒரு வாரம் கழித்து நவம்பர் 8 ம் தேதிக்கு பின்னர் பள்ளிகளை திறக்கும் நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
Job details tel me