1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்.13 வரை பள்ளிகள் விடுமுறை – அரசு அறிவிப்பு!

0
1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்.13 வரை பள்ளிகள் விடுமுறை - அரசு அறிவிப்பு!
1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்.13 வரை பள்ளிகள் விடுமுறை - அரசு அறிவிப்பு!
1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்.13 வரை பள்ளிகள் விடுமுறை – அரசு அறிவிப்பு!

கேரளா மாநிலத்தில் கொரோனா தொற்று நோய் பரவல் வீழ்ச்சியடைந்து வருவதை கருத்தில் கொண்டு 10 முதல் 12 வரையுள்ள வகுப்புகளுக்கு இன்று (பிப்.7) பள்ளிகள் மீண்டுமாக திறக்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.

பள்ளிகள் திறப்பு

மாநிலம் முழுவதும் தற்போதுள்ள கொரோனா நோய்த்தொற்று நிலைமையை ஆய்வு செய்த முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான கேரளா அரசு, இன்று முதல் பள்ளிகளை மீண்டுமாக திறக்க அனுமதி அளித்துள்ளது. அந்த வகையில் கேரளாவில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் பிப்ரவரி 7, 2022 முதல் நேரடி வகுப்புகளுக்காக மீண்டும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன. இப்போது அரசு வெளியிட்ட உத்தரவின்படி, அனைத்து கல்வி நிறுவனங்களும் படிப்படியாக ஆப்லைன் வகுப்புகளை மீண்டும் தொடங்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

TN TRB முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – தேர்வு தேதி மாற்றம்!

அந்த வகையில் முதற்கட்டமாக பிப்ரவரி 7 முதல் 10 லிருந்து 12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 14, 2022 முதல் பள்ளிகள் தொடங்க உள்ளது. இப்போது பள்ளிகளுடன் இணைந்து கல்லூரி மாணவர்களுக்கும் இன்று (பிப்.7) முதல் நேரடி வகுப்புகள் துவங்கி இருக்கிறது. கேரளா அரசின் இந்த முடிவானது முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் சமீபத்தில் நடைபெற்ற கொரோனா ஆய்வுக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது.

மாநிலத்தில் பிப்.15ம் தேதி முதல் முழு ஊரடங்கு ரத்து – அரசு அதிரடி அறிவிப்பு!

இப்போது பள்ளிகள் மீண்டுமாக திறக்கப்பட்டுள்ள நிலையில், நேரடி வகுப்புகளை தொடர்ந்து நடத்தலாமா என்பது குறித்து பிப்ரவரி 2ம் வாரத்திற்கு பின்பாக முடிவு எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனுடன் பள்ளி மாணவர்களிடையே கொரோனா நோய்த்தொற்று பதிவு செய்யப்பட்டால் அடுத்த 2 வாரங்களுக்கு வகுப்புகளை நிறுத்தவும் அரசு அறிவுறுத்தி இருக்கிறது. இதற்கு முன்னதாக கேரளாவில் ஒமிக்ரான் பரவலையடுத்து ஜனவரி 21 முதல் பள்ளிகள் அனைத்தும் முழுவதுமாக மூடப்பட்டன. இருப்பினும், மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!