தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு 5 நாட்கள் விடுமுறை – விரைவில் வெளியாகும் அறிவிப்பு!
தமிழகத்தில் வருகிற 19 ஆம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதன் வாக்கு எண்ணிக்கை 23 ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு 5 நாட்கள் விடுமுறை விட திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
பள்ளிகளுக்கு விடுமுறை:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டது. அதன் பின் கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த மாதம் கொரோனா மூன்றாம் அலை தாக்கம் காரணமாக பள்ளிகள் ஜனவரி 31 ஆம் தேதி வரை விடுமுறைவிடப்பட்டது. பின் பிப். 1 ஆம் தேதி முதல் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் திறக்கப்பட்டன.
1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்.13 வரை பள்ளிகள் விடுமுறை – அரசு அறிவிப்பு!
கொரோனா பரவல் இன்னும் முழுமையாக குறையாத காரணத்தால் பள்ளிகளில் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வருகிற பிப்ரவரி 19ஆம் தேதி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உட்பட பகுதிகளில் தேர்தல் நடைபெற இருக்கிறது. மேலும் இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை 22 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. அதனால் பள்ளிகளில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு வரும் 19ம் தேதி முதல் 23 ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
TN TRB முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – தேர்வு தேதி மாற்றம்!
இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது. பெரும்பாலும், பள்ளிகளில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட இருக்கின்றனர். அதனால் மாணவர்களுக்கு விடுமுறை விட அரசு முடிவு செய்துள்ளது. மேலும் தேர்தல் வேலைகள் முடிவடைந்த பின் பள்ளிகள் 23 ஆம் தேதிக்கு பின் வழக்கம் போல செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.