மாநிலத்தில் பிப்.15ம் தேதி முதல் முழு ஊரடங்கு ரத்து – அரசு அதிரடி அறிவிப்பு!
இந்தியாவில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் குறைந்து வரும் நிலையில் பல்வேறு தளர்வுகளை மாநில அரசு அறிவித்து வருகிறது. இதனை தொடர்ந்து அசாம் மாநில அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது.
முழு ஊரடங்கு ரத்து
இந்தியாவில் தென்னாப்பிரிக்காவில் உருவான ஓமைக்ரான் பரவல் வேகமாக பரவ தொடங்கியது. அதனால் இந்தியாவில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் தொடங்கியதால் அதனை கட்டுப்படுத்த தேவைப்பட்டால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மாநில அரசு அமல்படுத்தி கொள்ளலாம் என்று மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது. அதன்படி இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை மாநில அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து தற்போது பல்வேறு மாநிலங்களில் தொற்று பரவல் குறைய தொடங்கியுள்ளது.
இன்று முதல் மீண்டும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் – ஒமிக்ரான் பரவல் எதிரொலி!
அதனால் அமலில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது. அந்த வகையில் தற்போது அசாம் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைய தொடங்கியது. அத்துடன் ஓமைக்ரான் பரவலும் குறைந்து வருகிறது. இதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பில், மாநிலத்தில் தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால் வருகிற பிப்ரவரி 15ம் தேதி முதல் முழு ஊரடங்கு நீக்கப்படுகிறது என்று அம்மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.
அத்துடன் மாணவர்களின் நலன் கருதி 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் கட்டாயமாக தடுப்பூசியை செலுத்த வேண்டும். மேலும் பிப்ரவரி 15ம் தேதி முதல் அமலில் உள்ள அனைத்துக் கட்டுப்பாடுகளும் திரும்ப பெறப்படுகிறது என்றும் கூறியுள்ளார். மேலும் வருகிற ஏப்ரல் மாதம் குவஹாத்தி முனிசிபல் கார்ப்பரேஷன் மற்றும் கர்பி அங்லாங் தன்னாட்சி கவுன்சில் தேர்தல் நடைபெறும் என்று அறிவித்துள்ளார். அத்துடன் பொதுமக்கள் முகக்கவசம் அணிதல் மற்றும் தனிநபர் இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.