பிப்ரவரி 14 முதல் மழலையர் பள்ளிகள் & ப்ளே ஸ்கூல்கள் மீண்டும் திறப்பு – அரசு அனுமதி!
ஒடிசா மாநிலத்தில் கொரோனா 3ம் அலைப்பரவல் தாக்கம் படிப்படியாக வீழ்ச்சியடைந்து வரும் நிலையில் பிப்ரவரி 14ம் தேதி முதல் மழலையர் பள்ளிகள் மற்றும் ப்ளே ஸ்கூல்களை மீண்டும் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது.
பள்ளிகள் திறப்பு
நாடு முழுவதும் கொரோனா 3ம் அலைத்தொற்று தீவிரமடைந்து வந்ததையடுத்து கடந்த மாதத்தில் பள்ளிகள், கல்லூரிகள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களையும் மூடுவதற்கு ஒடிசா மாநில அரசு உத்தரவிட்டது. அந்த வகையில் சுமார் 4 வாரங்களாக மூடப்பட்டிருக்கும் கல்வி நிறுவனங்களை, பிப்ரவரி 7 முதல் மீண்டும் திறக்க அரசு அனுமதி அளித்ததுள்ளது. அந்த வகையில் தற்போது 1 முதல் 12 வரையுள்ள மாணவர்களுக்கான பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் முழு திறனுடன் மீண்டுமாக செயல்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் விடுமுறை – அரசுக்கு கோரிக்கை!
இந்நிலையில் மாநிலம் முழுவதும் கொரோனா தினசரி பாதிப்புகள் வீழ்ச்சியடைந்து வருவதை கவனத்தில் கொண்டு மழலையர் பள்ளிகள் மற்றும் விளையாட்டுப் பள்ளிகள் அனைத்தும் பிப்ரவரி 14 முதல் மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஒடிசா மாநில தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘பிப்ரவரி 14 முதல் 2021-22ம் கல்வி ஆண்டிற்கான மழலையர் பள்ளிகள் மற்றும் ப்ளே ஸ்கூல்களை மீண்டும் திறக்க அனுமதிப்பதில் அரசாங்கம் மகிழ்ச்சியடைகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் மீண்டும் இரவு நேர ஊரடங்கு அமல்? அரசு முக்கிய விளக்கம்!
இப்போது பள்ளிகள் வழக்கமான முறையில் மீண்டும் திறக்கப்படும் போது, அந்தந்த பள்ளி நிர்வாகங்கள் கொரோனா பொருத்தமான நடத்தை விதிகளை கவனமாக பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. மேலும், கற்பித்தல் மற்றும் கற்பித்தல் அல்லாத ஆசிரியர்கள், ஊழியர்கள் அனைவரும் கட்டாயமாக இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசிகளை பெற்றிருக்க வேண்டும் என்றும் சிறு குழந்தைகளின் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் பள்ளி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.