ஆகஸ்ட் 16 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி, விடுதிகள் திறப்பு – ஒடிசா அரசு அனுமதி!
ஒடிசா மாநிலத்தில் முன்னதாக உயர் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் வரும் ஆகஸ்ட் 16ம் தேதி முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகள் மற்றும் விடுதிகளை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது.
பள்ளி, விடுதிகள் திறப்பு:
ஒடிசா மாநிலத்தில் கடந்த ஜூலை 26ம் தேதி முதல் மாநிலம் முழுவதும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் கோவிட் – 19 கட்டுப்பாட்டு விதிமுறைகளுடன் மீண்டும் திறக்கப்பட்டது. கொரோனா பரவல் அச்சம் காரணமாக கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு மேலாக பள்ளிகள் மூடி இருந்தது குறிப்பிடத்தக்கது. உயர் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்ட பின்னர் அதன் விளைவுகளை பொறுத்து அடுத்த வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்று முன்னதாக மாநில அரசு அறிவித்தது.
தமிழகத்தில் கொரோனா மூன்றாம் அலை தடுப்பு – சிறப்பு குழு அமைப்பு!
தற்போது, எஸ் & எம்இ துறையின் அதிகார வரம்பிற்குள் வரும் அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் பிஎஸ்இ, ஒடிசா, சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ்இ மற்றும் பிற வாரியங்களின் கீழ் உள்ள அனைத்து பள்ளிகளும் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான நேரடி வகுப்புகளை மீண்டும் தொடங்க அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, 2021-2022 ம் கல்வி அமர்வில் 9ம் வகுப்புக்கு வரும் ஆகஸ்ட் 16ம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் விடுதிகள் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிறு மற்றும் பொது விடுமுறைகளை தவிர்த்து காலை 9 முதல் மதியம் 12.30 வரை வகுப்புகள் நடக்கும்.
TN Job “FB Group” Join Now
தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகளும் நடக்கும். நேரடி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மாணவர்கள் தங்கள் பெற்றோரின் கடிதத்துடன் அனுமதிக்கப்படுவார்கள். முன்னதாக உயர் வகுப்பு மாணவர்களுக்கு விடுதிகள் திறக்கும் போது அறிவிக்கப்பட்ட அதே நெறிமுறைகள் இவர்களுக்கும் பொருந்தும். இருப்பினும், சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அவ்வப்போது வழங்கும் அனைத்து வழிகாட்டுதல்கள் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.