தமிழகத்தில் கொரோனா மூன்றாம் அலை தடுப்பு – சிறப்பு குழு அமைப்பு!
தமிழகத்தில் கொரோனா மூன்றாம் அலையில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க அரசு சார்பில், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் 13 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
சிறப்பு குழு அமைப்பு:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிர வேகமெடுத்து பரவி அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனை கட்டுப்படுத்த முதல்வர் தடுப்பு பணிகளை விரைவுபடுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு வருகிறார். மேலும் தடுப்பு நடவடிக்கையாக தற்போது தமிழகம் முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மாதத்தை ஒப்பிடும்போது இந்த மாதம் பாதிப்புகள் குறைவு. ஆனால் ஓரிரு மாவட்டங்களில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை உயர்கிறது.
தமிழகத்தில் பேராசிரியர்கள் கட்டாயம் கல்லூரிக்கு வர உத்தரவு – ஆகஸ்ட் 9 முதல் வகுப்புகள்!
அதனால் மேலும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. மற்றொரு புறம் தடுப்பூசிகள் செலுத்தும் பணியும் துரிதப்படுத்தப்பட்டு வருகிறது. இரண்டாம் அலை பாதிப்புகள் முழுமையாக குறையாத நிலையில் கொரோனா மூன்றாம் அலை வரும் என்றும், அது குழந்தைகளை தாக்கும் என மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர். இதனால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் உடல் நலம் குறித்து கவலை அடைந்துள்ளனர். இந்த நிலையில் குழந்தைகளுக்கான தடுப்பூசிகள் இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை.
TN Job “FB Group” Join Now
இரு கட்ட பரிசோதனையில் உள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிந்துள்ளது. தமிழகத்தில் மூன்றாம் அலையில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் நடவடிக்கையாக அரசு சார்பில், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் 13 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அரசு குழந்தைகள் சிறப்பு மருத்துவமனையை ஏற்படுத்தி முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொண்டு வருகிறது. மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகளை தயார் செய்து கொரோனா குழந்தைகள் பிரிவை உருவாக்கியுள்ளது. மேலும் குழந்தைகள் நல மருத்துவர்கள் தயாராக இருக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது.