தமிழகத்தில் பேராசிரியர்கள் கட்டாயம் கல்லூரிக்கு வர உத்தரவு – ஆகஸ்ட் 9 முதல் வகுப்புகள்!
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு முதல் கல்லூரிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டது. இந்தாண்டும் ஆகஸ்ட் 9 ஆம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட உள்ள நிலையில் அனைத்து பேராசிரியர்களும் கட்டயம் கல்லூரிக்கு வர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆன்லைன் வகுப்புகள்:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக கடந்த ஆண்டு பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாகவும், கல்வி தொலைக்காட்சி மூலமாகவும் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. தற்போது கொரோனா பரவல் குறைவதால் பல்வேறு தளர்வுகள் படிப்படியாக வழங்கப்பட்டன. அதன்படி தற்போது அனைத்து கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் – வானிலை அறிக்கை!
இந்நிலையில் தொடர்ந்து கொரோனா அச்சம் காரணமாக தற்போது வரை கல்லூரிகள் திறக்கப்படாத காரணத்தால் இந்த கல்வியாண்டும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி பொறியியல் மற்றும் கலை, அறிவியல் கல்லூரிகளில் வருகின்ற 9 ஆம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்க இருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
TN Job “FB Group” Join Now
இதனால் ஆன்லைன் வகுப்புகள் தொடங்க உள்ள நிலையில் அனைத்து பொறியியல் மற்றும் கலை, அறிவியல் கல்லூரி பேராசிரியர்கள், பணியாளர்கள் அனைத்து வேலை நாட்களிலும் கல்லூரிக்கு கட்டாயம் வர வேண்டும் என தொழில்நுட்ப கல்வி இயக்ககம், கல்லூரி கல்வி இயக்ககம், பல்கலைக்கழக பதிவாளர்களுக்கு உயர்கல்வித்துறை செயலர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.