மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகள் மே 16ம் தேதி முதல் திறப்பு – அரசு அதிரடி அறிவிப்பு!
இந்தியாவில் கொரோனா பரவல் குறைந்த நிலையில் தற்போது அனைத்து துறைகளும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன. அத்துடன் பல்வேறு மாநிலங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு வழக்கம் போல செயல்பட தொடங்கியுள்ளன. இதனை தொடர்ந்து கர்நாடக மாநிலத்தில் அடுத்த கல்வியாண்டு தொடங்குவதற்கான தேதியும் அறிவித்துள்ளது.
பள்ளி திறப்பு
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதத்தில் முதன் முதலில் கண்டறியப்பட்டது. அதனால் தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு அமல்படுத்தியது. அத்துடன் மாணவர்களின் நலன் கருதி பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழிக்கல்வி முறையில் பாடங்கள் நடத்தப்பட்டது. மேலும் தற்போது இந்தியாவில் கொரோனாவின் முதல் மற்றும் 2ம் அலை மற்றும் 3ம் அலை பரவி முடிந்துள்ளது. இதனை தொடர்ந்து தற்போது இந்தியாவில் 4ம் அலை ஜூன் மாதத்தில் பரவும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ExamsDaily Mobile App Download
தற்போது கொரோனாவின் 3ம் அலை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவின் 3ம் அலையின் போது அமல்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் கடந்த மாதம் மார்ச் 31ம் தேதியுடன் மத்திய அரசு திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் கர்நாடகத்தில் கடந்த ஆண்டு பி.யூ.சி. 2 ஆண்டுகளாக பொதுத்தேர்வு நடத்தப்படவில்லை. அதனால் இந்த ஆண்டு கட்டாயமான முறையில் நடத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி கர்நாடக மாநிலத்தில் இன்று பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு சனிக்கிழமை விடுமுறை – கல்வித்துறை முடிவு!
மேலும் கொரோனா காரணமாக குறைவான நாட்களே நேரடி வகுப்புகள் நடைபெற்றதால் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டு தேர்வுகள் நடைபெறுகிறது. இந்த நிலையில் தற்போது அடுத்த கல்வியாண்டு குறித்த அறிவிப்பை கர்நாடக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் கூறியதாவது, கொரோனா பரவல் குறைந்துள்ளதால் இந்த ஆண்டு 15 நாட்கள் முன்கூட்டியே பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. அதாவது 2022-23-ம் ஆண்டுக்கான கல்வி ஆண்டு மே மாதம் 16ம் தேதி அன்று பள்ளி மற்றும் பி.யூ.கல்லூரிகள் திறக்கப்பட உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் பருவ வகுப்புகள் அக்டோபர் மாதம் 2ம் தேதி வரை நடைபெறும் என்றும் 2ம் பருவத் தேர்வு அக்டோபர் 17ம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 10ம் தேதி வரை நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.