தமிழகத்தில் 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு சனிக்கிழமை விடுமுறை – கல்வித்துறை முடிவு!
தமிழகத்தில் நாளுக்கு நாள் கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருவதால் 1 – 5 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு சனிக்கிழமைகளில் விடுமுறை அளிப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை பரிசீலனை செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அச்சத்தால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நேரத்தில் மாணவர்களின் கல்வி நிலை பாதிப்படையக் கூடாது என்பதற்காக ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வந்தது. ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருவதால் மாணவர்களின் கற்றல் அடைவில் பின்னடைவு ஏற்படுத்துவதாக ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் கருதினர். அதனால் மீண்டும் பள்ளிகளை திறந்து நேரடி வகுப்புகளை நடத்த கோரிக்கைகள் எழுந்தது. இதனையடுத்து அரசு நோய்த் தடுப்பு பணிகளில் தீவிரம் காட்டி பாதிப்பு எண்ணிக்கைகளை குறைத்தது.
ஏப்ரல் 30 முதல் மே 4 வரை பொது விடுமுறை அறிவிப்பு – இதற்காக தான்? அரசு விளக்கம்!
அதன் பிறகு மீண்டும் பள்ளிகளை திறக்க அரசு அனுமதி வழங்கியது. இதன் பேரில் கடந்த பிப்ரவரி மாதம் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு வழக்கம் போல நேரடி வகுப்புகள் தொடங்கியது. அதனால் நடப்பு கல்வியாண்டில் பொதுத்தேர்வுகளை நடத்தவும் பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்து தேர்வு கால அட்டவணையை வெளியிட்டது. ஏற்கனவே வெகு நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தால் விரைந்து பாடங்களை முடிக்க சனிக்கிழமையும் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது.
ExamsDaily Mobile App Download
இந்த நேரத்தில் கோடை வெளியின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பள்ளி செல்லும் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களை கருத்தில் கொண்டு சனிக்கிழமை 1 -5 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க கோரிக்கை வைக்கப்பட்டது. இதனையடுத்து சனிக்கிழமை விடுமுறை அளிப்பது குறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாகவும், இது குறித்த பரிசீலனை நடைபெற்று வருவதாவும் கூறப்படுகிறது. விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.