பள்ளிகளின் வேலை நேரங்கள் மாற்றம் – போக்குவரத்துக்கு நெரிசலால் அரசுக்கு அறிவுறுத்தல்!
பெங்களூரு நகரில் அதிக அளவிலான போக்குவரத்து நெரிசல் காரணமாக மாற்று ஏற்பாடுகளுக்கான ஆலோசனைகளை மாநில அரசு செய்யுமாறு கர்நாடகா உயர்நீதி மன்றம் அறிவுறுத்தியுள்ளது.
போக்குவரத்து நெரிசல்:
நாட்டின் மெட்ரோ நகரங்களில் பெங்களூரு முக்கிய இடத்தை பெற்றுள்ளது. அதிக அளவிலான ஐடி தொழில் நிறுவனங்கள் மற்றும் பல்வேறு தொழில்களுக்குமான இருப்பிடமாக பெங்களூரு நகரம் திகழ்ந்து வருகிறது. இதன் காரணமாக நாளுக்கு நாள் அங்கு அதிகளவிலான மக்கள் குடியேறி வருகின்றனர். இதன் காரணமாக நகரில் அதிக அளவிலான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ‘பீக் அவர்ஸ்’ எனப்படும் காலை நேரத்தில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் பணிக்கு செல்லும் அனைவரும் ஒரே நேரத்தில் போக்குவரத்தை மேற்கொள்வதால் அங்கு அதிகபட்ச காத்திருப்பு நிகழ்ந்து வருகிறது. இதன் காரணமாக வேலை நேரத்திற்கு பல மணி நேரங்கள் முன்னதாகவே தயாராக வேண்டி உள்ளது.
ரேஷன் கார்டில் பெயரை நீக்க வேண்டுமா? இதை பாலோவ் பண்ணுங்க!
இந்நிலையில் கர்நாடகா உயர்நீதிமன்றம் அனைத்து தரப்பினரையும் அழைத்து மாநிலத்தில் பள்ளி நேரங்கள் மாற்றம் குறித்த ஆலோசனைகளை நடத்தி உரிய முடிவுகளை எடுக்கலாம் என்று அறிவுறுத்தியுள்ளது. மேலும் 8.30 மணிக்கு தற்போது தொடங்கும் பள்ளிகளின் வேலை நேரத்தை காலை 8:00 மணி அல்லது 7:30 மணிக்கு தொடங்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்கும் பட்சத்தில் போக்குவரத்து நெரிசல் சற்று குறைய வாய்ப்புகள் உள்ளது. ஆனால் இது குறித்து பெற்றோர்கள் ஆசிரியர்கள் மற்றும் குழந்தை நல ஆர்வலர்கள் மத்தியில் பல்வேறு மாற்றுக் கருத்துக்களும் நிலவி வருவதால் அரசு இது குறித்த ஆலோசனையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.