ரேஷன் கார்டுதாரர்களுக்கு தீபாவளி பரிசு – அரசு அறிவிப்பு!
நாடு முழுவதும் இந்த மாதம் அதிகமாக பண்டிகை தினங்கள் வர இருக்கும் நிலையில், மஹாராஷ்டிரா அரசு ரேஷன் கார்டுதரர்களுக்கு சூப்பர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
ரேஷன் கடைகள்
இந்தியாவில் இந்த மாதம் முதல் அடுத்தடுத்து பண்டிகை நாட்கள் வர இருக்கிறது. அதனால் பல மாநில அரசுகள் ரேஷன் கடைகள் மூலமாக பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் மஹாராஷ்டிரா அரசு 1.67 கோடி ரேஷன் கார்டுதாரர்களுக்கு தீபாவளி சிறப்பு உணவுப் பொருட்களை வழங்க இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த உணவு தொகுப்பில் ரூ. 100 -க்கு வழங்கப்பட இருக்கிறது. இந்த அரசு கடந்த ஆண்டு ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரவை, பருப்பு, சர்க்கரை மற்றும் சமையல் எண்ணெய் ஆகிய நான்கு பொருட்கள் அடங்கிய உணவு பெட்டிகளை வழங்கியது.
பள்ளிகளின் வேலை நேரங்கள் மாற்றம் – போக்குவரத்துக்கு நெரிசலால் அரசுக்கு அறிவுறுத்தல்!
அதனை தொடர்ந்து இந்த ஆண்டு சுத்திகரிக்கப்பட்ட கோதுமை மாவு மற்றும் போஹா (தட்டையான அரிசி) மற்றும் கடந்த ஆண்டு வழங்கிய பொருட்களையும் வழங்க இருக்கிறது. இந்த பரிசு பெட்டி அந்த்யோதயா உணவுத் திட்டம், முன்னுரிமை குடும்ப ரேஷன் அட்டைதாரர்கள், ஆரஞ்சு ரேஷன் அட்டைதாரர்கள், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள விவசாயிகள் தற்கொலையால் பாதிக்கப்பட்ட 14 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் உட்பட மொத்தம் 1.67 கோடி பேருக்கு வழங்கப்பட இருக்கிறது.