தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு? அமைச்சர் நடத்தும் ஆலோசனை!

0
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு? அமைச்சர் நடத்தும் ஆலோசனை!
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு? அமைச்சர் நடத்தும் ஆலோசனை!
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு? அமைச்சர் நடத்தும் ஆலோசனை!

தமிழகத்தில் 10, 11 12 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகளை நடத்துவது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் 1 முதல் 8 வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுவதும் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட உள்ளது.

பள்ளிகள் திறப்பு:

தமிழகத்தில் செப்டம்பர் 1ம் தேதி முதல் 9 முதல் 12 வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் சுழற்சி முறையில் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் 1 முதல் 8 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் பள்ளிகள் திறப்பது குறித்து கருத்துக்கள் கேட்டறியப்பட்டது. அது குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு நவம்பர் 1ம் தேதி 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று அறிவித்துள்ளார். இதற்கு பலரும் வரவேற்பு அளித்துள்ளனர். கொரோனா பரவும் நிலையில் தொடக்க நிலை மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு ஏன்? என்று பலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

SBI YONO வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – இலவச வருமான வரிக்கணக்கு தாக்கல்!

அதனை தொடர்ந்து தற்போது 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை நடத்துவது தொடர்பாகவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த வருடம் பொதுத்தேர்வு நெருக்கும் நிலையில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமெடுத்தால் மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. கொரோனா தொற்று குறையாத நிலையில் 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு மதிப்பிட்டு முறையிலான மதிப்பெண்கள் வழங்கப்பட்டது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு பம்பர் அறிவிப்பு? 31% DA உயர்வு – முழு விளக்கம் இதோ!

தற்போது இந்த வருடம் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. மேலும் கொரோனா பரவும் நன்கு குறைந்து வருவதால் 2021 – 2022ம் ஆண்டுக்கான 10, 11, 12 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான ஆலோசனையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஈடுபட்டுள்ளதாகவும் மேலும் 1 முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படுவது தொடர்பாகவும் ஆலோசனை நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா தொற்று முழுமையாக குறையாத நிலையில் 1 முதல் 8 வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பிற்கு எதிர்ப்புகளும் வந்துள்ளதால் தற்போது நடைபெறப்போகும் ஆலோசனைக்கு பிறகு பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்படுவது குறித்த அறிவிப்பு வெளியாகுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!