1 – 7ம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 28 முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு – தேர்தல் எதிரொலி!
ஒடிசாவில் பஞ்சாயத்து தேர்தலை முன்னிட்டு 1 முதல் 7ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு பிப்ரவரி 28 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.
பள்ளிகள் திறப்பு
ஒடிசா மாநிலத்தில் வரவிருக்கும் பஞ்சாயத்துத் தேர்தலை கருத்தில் கொண்டு, 1 முதல் 7ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு பிப்ரவரி 28 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்றும், முன்பு அறிவித்தபடி இந்த மாதம் 14 ஆம் தேதி பள்ளிகள் திறப்பு இருக்காது என்றும் மாநில அரசு தெரிவித்துள்ளது. இதற்கிடையில் பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் முன்பு போலவே தொடரும் என்று பள்ளி மற்றும் வெகுஜன கல்வித்துறை செயலாளர் பிபி சேதி மாவட்ட அதிகாரிகளுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
திருப்பதி ஏழுமலையான் தரிசனம் செல்வோருக்கு ஹாப்பி நியூஸ் – 10 ஆயிரம் இலவச தரிசன டிக்கெட்டுகள்!
இப்போது ஒடிசா மாநிலம் முழுவதும் உள்ள பஞ்சாயத்துகளுக்கான தேர்தல் பிப்ரவரி 16, 18, 20, 22 மற்றும் 24 ஆகிய தேதிகளில் ஐந்து கட்டங்களாக நடைபெற இருக்கிறது. இதனால் பிப்ரவரி 14 முதல் தொடங்கவிருந்த 1 முதல் 7 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் அந்த தேதியில் திறக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. என்றாலும் அவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ளலாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இது தவிர அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வருகை தந்து, வளாகத்தை முழுமையாக சுத்தம் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இப்போது மாநிலம் முழுவதும் பஞ்சாயத்து தேர்தலுக்கான செயல்முறையில் பள்ளி மற்றும் கல்வித்துறையை சேர்ந்த ஏராளமான ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இது தவிர, பல பள்ளி வளாகங்கள் வாக்குச் சாவடிகளாக பயன்படுத்தப்பட இருக்கும் சூழலில் 1 முதல் 7 வரையுள்ள வகுப்புகள் பிப்ரவரி 14 முதல் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக பிப்ரவரி 7 முதல் 8 லிருந்து 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை அரசு திறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.