நவம்பர் 1 முதல் தினசரி மதியம் பள்ளிகளுக்கு விடுமுறை – மாநில அரசின் வழிகாட்டுதல்கள்!
கேரளாவில் நவம்பர் 1 ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. இதையடுத்து பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து சுகாதாரத்துறை ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.
பள்ளிகள் திறப்பு:
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக பரவுவதால் கடந்த வருடம் முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டு கொரோனா இரண்டாம் அலை வேகம் எடுப்பதால் புதிய கல்வியாண்டு தொடங்கியுள்ள போதிலும் பள்ளிகளை திறக்க முடியாத நிலையில் பள்ளிக்கல்வித்துறை இருந்தது. தடுப்பூசிகளின் பயன்பட்டால் இந்தியா முழுவதும் பாதிப்புகள் குறைந்துள்ள நிலையில் மீண்டும் பள்ளிகளை திறப்பது குறித்து அனைத்து மாநில பள்ளி கல்வித்துறையின் ஆலோசனையில் ஈடுபட்டு படிப்படியாக ஒவ்வொரு மாநிலங்களாக பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கு அரசின் உதவித்தொகை – விண்ணப்பங்கள் வரவேற்பு!
முதல் கட்டமாக அனைத்து மாநிலங்களிலும் மேல்நிலை வகுப்புகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. கேரளாவில் கொரோனா பரவல் குறைந்து வந்ததை அடுத்து நேற்று முதல் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. மேலும், வருகிற நவம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் பள்ளிகளையும் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நவம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் 1 முதல் 7 மற்றும் 10, 12 வரையிலான வகுப்புகளும் நவம்பர் 15 முதல் 8, 9, 11 ஆகிய வகுப்புகளும் தொடங்கப்படவுள்ளன.
தமிழகத்தில் நாளை (அக்.7) மின் தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
இதையடுத்து பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து சுகாதாரத் துறையினர் ஆலோசனையில் மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆலோசனையில் 1 முதல் 7 வகுப்புகளில் ஒரு வகுப்புக்கு அதிகபட்சமாக 10 மாணவர்களையும். 8 ஆம் வகுப்புக்கு மேல் 20 மாணவர்களையும் அமர வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது மேலும் பள்ளிகள் மதியம் வரை மட்டுமே செயல்படும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.