தமிழகத்தில் நாளை (அக்.7) மின் தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் மேலமடை மற்றும் அண்ணாநகா் மின்பிரிவுக்குள்பட்ட தாசில்தாா்நகா் மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே அந்த பகுதிகளிலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் மின்தடை ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது. அது குறித்து இந்த பதிவில் காணலாம்.
மின்தடை:
தமிழகத்தில் புதிதாக தலைமையேற்றுள்ள அரசு அனைத்து துறைகளிலும் பல்வேறு மாற்றங்களை புகுத்தியுள்ளது. மற்ற துறைகளை தொடர்ந்து மின்சார துறையில் அரசு முக்கிய சிறப்பம்சங்களை கொண்டு வந்துள்ளது. தமிழகத்தில் மின் தொடர்பான புகார்களை நிவர்த்தி செய்ய மின் புகார் மையம் அமைக்கப்பட்டு கோரிக்கைகள் சரி செய்யப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள துணை மின் நிலையங்களில் மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
திருப்பதி ஏழுமலையான் பக்தர்கள் கவனத்திற்கு – நாளை பிரம்மோற்சவம் தொடக்கம்!
அதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை மின்தடை ஏற்பட்டு வருகிறது. இந்த மின்தடை தொடர்பாக மின்வாரியம் முன்னதாக அப்பகுதி மக்களுக்கு அறிவித்து மக்களை எச்சரிக்கிறது. இந்த மின்தடை குறித்த அறிவிப்பால் மின் பயனர்கள் மின் சார்ந்த வேலைகளை மின்தடைக்கு முன்னரே முடிக்க உதவியாக உள்ளது. மற்ற பகுதிகளை தொடர்ந்து நாளை மேலமடை மற்றும் அண்ணாநகா் மின்பிரிவுக்குள்பட்ட தாசில்தாா்நகா் மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே,
- தாசில்தாா்நகா்
- மருதுபாண்டியர் தெரு
- சித்தி விநாயகர் கோவில் தெரு
- அன்புமலர் தெரு
- ஆவின் நகர்
- கோல்டன் நகர்
- அண்ணா நகர் கிழக்கு
- ஜே.ஜே.நகர்
- ஜூப்ளி டவுன்
- தாசில்தாா்நகா்
- மருதுபாண்டியர் நகர்
- சதாசிவம் நகர்
- யாகப்பா நகரின் ஒரு பகுதி
யானை குழாய் சாலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் பராமரிப்பு ஊழியர்களின் நலன் கருதி நாளை காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை மின்தடை செய்யப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் ஜி.மலர்விழி கூறியுள்ளார்.